வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

என் தோழி உனக்காக

நித்தி உன் நட்பை எந்த அளவு
நேசிக்கிறேன்
என்று எனக்கு சொல்ல
தெரியாது...
ஆனால் ...
உன் நட்பை
நேசிக்கும்
அளவுக்கு என் காதலியை நேசிக்கவில்லை என்பதே உண்மை .......
சாம் ..

என் அக்காவுக்கு

மாற்றம் நிறைந்த
இந்த உலகத்தில்
மாற்றமே இல்லாமல்
வாழ்ந்திட ஆசை
என்றும் நான் ...
உன் தம்பியாக..
நீ என் அக்காவாக ......
பாசத்துடன் சாம் ,............!

நமக்காக காத்திருக்கும்

சூரியனுக்காக காத்திருக்கும் சூரியகாந்தி ......
நிலவுக்காக காத்திருக்கும் அல்லி....
அசைதலுக்கு காத்திருக்கும் மரம்...
மழைக்காக காத்திருக்கும் நிலம்..
உன் நட்பிற்கு காத்திருக்கும் நான்..
நமக்காக காத்திருக்கும் நட்பு...
நட்புடன் சாம் ...........

பசப்புறு பருவரல் - காதல் பூக்கும் மாதம் - 100

10. பசப்பு உறு பருவரல்

உன்னிடம் பகிர்ந்தால்
எல்லாத் துயரங்களும் பாதியானது.
பிரிவுத் துயரம் மட்டும் இரட்டிப்பாகிறது.


நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற.

என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?

உன் பிரிவு தரும் துக்கமும்
உடலைத் தாண்டி உயிர் வரைப் பரவுகிறது…
உன் முத்தங்களைப் போல!


அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!

நீ பார்க்காமல்
நானெப்படி அழகாவேன்?
உன்னைப் பார்க்காமல்
எனக்கெப்படி வரும் வெட்கம்?
எப்போது உன்னைப் பிரிவேன் எனக்
காத்திருந்து தாக்குகிறது காதல் நோய்.


சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.


என் மனமும் உதடும்
முணுமுணுப்பது உன்னை மட்டும்தானே?
எனக்கேத் தெரியாமல் எப்படி வந்தது பசலை?


உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?


இடுப்பில் இருந்து
இறக்கிவிடமுடியாதக் குழந்தையைப் போல
உன்னையேத் தொற்றிக்கொண்டிருக்கிறது
என் மனம்.


உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது.

என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.


விடைபெறும் கடைசி தருணம்
என்விரல் விட்டு உன் விரல் பிரியும்
இறுதி நொடியில்
பௌர்ணமி அமாவாசையானது போல
அழிந்துபோனது என் அழகெல்லாம்!


விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.


‘தூக்கத்திலும் கூட
என்னைக் கட்டிக் கொண்டே தூங்குவதேன்?’ என்கிறாய்.
ஒருவேளை கனவில் என்னைப் பிரிந்து விட்டால்?


புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!


என் அழகு குறைந்து கொண்டே வருகிறதென
கண்ணாடி கூட பழிக்கிறது!
அதற்கெப்படிப் புரியும்?
என்னழகுக்குக் காரணம் நீயென!



பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்.

இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே.


என் பிரிவுதான்
உன் பிரியமெனில்
தாராளமாக
என்னைப் பிரி!
என்னுயிர் உரி…



பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!


நீ நலம் என்றால்
நானும் நலம்.
நீ நலமில்லையென்றால்
நானே இல்லை!


பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!

கண் விதுப்பழிதல் - காதல் பூக்கும் மாதம் - 90

9. கண் விதுப்பழிதல்

உன்னை எனக்குக் காட்டியதால்
கோடிமுறை நன்றி சொல்லியிருப்பேன் என் கண்களுக்கு…
நீ பிரிந்ததும் என்னைக் காண மனமில்லாமல் அவை
கண்ணீரால் தம் முகம் மறைக்கின்றன!


கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது.

தீராத இக்காமநோய் கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க காட்டிய கண்கள் தாமே இப்போது அழுவது ஏன்?

காதலில்
கண் பேசியதெல்லாம்
மனதுக்குப் புரிந்தது.
பிரிவில்
மனம் சொல்வதெதுவும்
அழுகிறக் கண்ணுக்குப் புரிவதில்லை.

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைத லுழப்ப தெவன்.

ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்புகொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?


உன் தரிசனத்துக்காக
என்னை உன்பின்னே அலையவிட்டவை,
இன்று உன்னைப் பார்க்க முடியாமல்
ஒளிந்து கொள்ள வைக்கின்றன!
புரிந்துகொள்ளவே முடியவில்லை
என் கண்களையும்,
பிரிந்து போன உன்னையும்!


கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்துநோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

என்னை விட்டுப் போவதென முடிவெடுத்தபின்
என் காதலைப் போல
என் கண்களையும் கொன்று விட்டுப் போ!
அல்லது
வற்றாத கண்ணீரைத் தந்து விட்டுப் போ!


பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா
உய்வினோ யென்கண் நிறுத்து.

என் கண்கள் தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

என் காதல் கடலை விடப் பெரியது.
உன் பிரிவால் வழியும் கண்ணீர்க்கடலோ
என் காதலைவிடப் பெரியது.


படலாற்றா பைதல் லுழக்குங் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண்.

அன்று கடலும் தாங்கமுடியாத காம்நோயை உண்டாக்கிய என் கண்கள் இன்று உறங்கமுடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

உன்னைக்
காதலில் நனைத்தேன்.
நீயோ பிரிந்துவிட்டு
என் கண்களை நனைக்கிறாய்…


ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்
தாஅ மிதற்பட் டது.

எமக்கு இந்தக் காமநோயை உண்டாக்கிய கண்கள் தாமும் இத்தகைய துன்பத்தைப் பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

உன் பிரிவால்
அழுதழுது என் கண்ணீர்
வற்றிப் போனாலும்,
சுரந்துகொண்டே இருக்கிறது…
உன் மீதானக் காதல்!



உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண்.

அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

நீ காதலை வைத்தது
உள்ளத்திலோ உதட்டிலோ தெரியவில்லை.
ஆனால் விலகும்போது
கடலை வைத்துவிட்டுப் போகிறாய்
என் கண்ணில்!

பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்.

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார். அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

பாவம் என் கண்கள்.
நீ தூங்கவே விடுவதில்லை…
காதலித்த போதும், பிரிந்தபிறகும்!


வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா ஆயிடை
யாரஞ ருற்றன கண்.

காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

உன்னிடம்
என் காதலைக் காட்டிக் கொடுத்ததும்,
உன் பிரிவை ஊருக்கெல்லாம்
அழுதேக் காட்டிக் கொடுக்கப் போவதும்,
என் கண்கள்தாம்!


மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ
லறைபறை கண்ணா ரகத்து.

அறையப் படும் பறபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் உரார்க்கு அரிது அன்று.

படர் மெலிந்து இரங்கல் - காதல் பூக்கும் மாதம் - 80

8.படர் மெலிந்து இரங்கல்

எப்படித்தான் இருகையால்
பொத்திவைத்தாலும்
விரலிடுக்கில் வழிகிற நீரைப் போல
வெளிவந்துவிடுகிறது.
என் காதல்!


மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

இக்காமநோயைப் பிறர் அறியாமல் யான்மறைப்பேன்; ஆனால், இது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுவது போல் மிகுகின்றது.


உன்னைப் பார்த்து முதன்முதலாய்
வெட்கம் வந்தபோது
காதல் வந்ததை உணர்ந்தேன்!
உன்னிடம் காதலைச் சொல்ல வந்தாலோ
மறுபடி வெட்கம்தானடா வருகிறது!


கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்.

இக்காதல் நோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை. நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.


காதலும் நாணமும்
இரட்டைக் குழந்தைகளா?

காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா வுடம்பி னகத்து.

துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருபக்கமும் தொங்குகின்றன


கடலைக் கரையில் இருந்து வேடிக்கை பார்க்கும் சிறுவனைப் போல
காதலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
முழுவதுமாய் உள்ளிழுத்துக் கொண்டு சிரிக்கிறாய்.

காமக்கடல் மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில்.

காமநோயாகிய கடல் இருக்கின்றது; ஆனால் அதை நீந்திக் கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.


இன்பத்துள் இன்பமா?
துன்பத்துள் துன்பமா?
காதல்.

துப்பி லெவன்செய்வார் கொல்லோ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்.

இன்பமான நட்பிலேயே துயரத்தி வரச்செய்ய வல்லவர், துன்பம் தரும் பகையை வெல்லும் வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?


காதலின்பம் – மலை.
பிரிவுத்துயர் – கடல்.
அதிகமெது,
உயரமா? ஆழமா?


இன்பங் கடலற்றுக் காமமற் றஃதடுங்கால்
துன்ப மதனிற் பெரிது.

காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

காதல் – கடல்.
நீந்தினால் கரையேரலாம்.
பிரிவு – கரையில்லாத கடல்.
நீந்தலாம்…அவ்வளவுதான்!



காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன்.

காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.


நான் துணைதான்!
பரிவில் உனக்கும்…
பிரிவில் இரவுக்கும்…


மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா
வென்னல்ல தில்லை துணை.

இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமலிருக்கின்றது.


கூடிக்களித்த பொழுதுகளில் ஓடிப்போகிறது.
நரக வேதனையில் நானிருக்க
நகர மறுக்கிறது.
உன்னைவிடக் கொடுமையானது இந்த இரவு.


கொடியார் கொடுமையில் தாங்கொடிய விந்நாள்
நெடிய கழியு மிரா.

பிரிந்து துன்புறுகின்ற இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையைவிடத் தாம் கொடியவை.


என் இதயத்தைப் போல
உன் கூடவேப் போயிருந்தால்
என்னிடமிருந்து அழவேண்டிய பாவமில்லை
இந்தக் கண்களுக்கு.


உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்.

காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல செல்ல முடியுமானால் என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

பிரிவாற்றாமை - காதல் பூக்கும் மாதம் - 70

7.பிரிவாற்றாமை

உன்னைவிட்டுப் பிரிந்தாலும்
உன் நினைவுகளை எடுத்துச் செல்கிறேன்’ என்கிறாய்.
இந்தா என் உயிரையும் எடுத்துசெல்.


செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல்.


என்னை எப்பொழுது பார்ப்பாயென
காதலில் ஏங்கித் தவித்தக் கண்கொண்டு
உன்னை எப்படிப் பார்ப்பேன்?
பிரியப் போகிறாயெனத் தெரிந்தபின்…


இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத்தாற் புணர்வு.

அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது. இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.


பிரியமாய் இருப்பதால்தான்
பிரியாமல் இருப்பாயென
நம்பி ஏமாறுகிறதோ மனது?



அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ளபடியால், அவர் ‘பிரியேன்’ என்று சொல்லும் உறுதிமொழியை நம்பித் தெளிவது அரிது.


நீஅஞ்சாமல்,
உலகுக்கு அஞ்சிப் பிரிந்துவிட்டாய்.
நானோ துயருக்குத் தோழமையாகிறேன்.
காதலுக்கு துரோகியாகிறேன்.
பிரிவுக்கு

அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
றேறியார்க் குண்டோ தவறு.

அருள் மிகுந்தவராய் ‘அஞ்ச வேண்டா’ என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதி மொழியை நம்பித் தெளிந்தவர்க்குக் குற்றம் உண்டோ?


ரசித்து ரசித்து காதலிப்பது எப்படியென
தெரிந்த மனதுக்கு
பிரியாமல் உன்னைக் காப்பது எப்படியென
தெரியாமல் போனது!

ஓம்பி னமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கி னரிதாற் புணர்வு.

காத்துக் கொள்வதனால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும்; அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.


பிரிந்துவிடலாமா எனக்கேட்கத் துணிந்த
உன் கல் நெஞ்சில் மறுபடியும்
என்ன சுரக்குமெனக் காத்திருக்கிருக்கிறேன்?
காதல் நீரா? கானல் நீரா?


பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர்
நல்குவ ரென்னு நசை.

பிரிவைப் பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால், அத்தகையவர் திரும்பி வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.


உடலில் குறையும் எடையைத்தான்
உள்ளத்தில் சுமையாகக் கூட்டுகிறதா
உன் பிரிவு?



துறைவன் றுறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை.

என் மெலிவால் முன்கையில் இறைகடந்து சுழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ?


என் உறவுகளைப் பிரிவது
உயிரேப் போவதுபோல..
உன்னைப் பிரிவதோ அதற்குமேலே…
அதை எப்படி சொல்ல?


இன்னாது இனனில்லூர் வாழ்த லதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு.

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது; இனிய காதலரின் பிரிவு அதைவிடத் துன்பமானது.


தொட்டபோதெல்லாம் சில்லென இருந்துவிட்டு
விலகியபின்தான் எரிக்குதடி காதல் தீ!


தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ.

நெருப்பு தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காம்நோய்போல் தன்னை விட்டு நீங்கியபொழுது சுடவல்லதாகுமோ?


உன்னைப் பிரிந்தபின்
நானும் கூட வாழ்ந்திருப்பேன்
உயிருள்ளப் பிணமாய்!


அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.

பிரியமுடியாத பிரிவிற்கு உடன்பட்டு ( பிரியும்போது ) துன்பத்தால் கலங்குவதையும் விட்டு, பிரிந்தபின் பொறுத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.

அலர் அறிவுறுத்தல் - காதல் பூக்கும் மாதம் - 60

6. அலர் அறிவுறுத்தல்


உனக்கென் காதல்
புரியவில்லையென்று போகத்துடித்தாலும்,
உனக்கும் எனக்கும்
‘ஏதோ’ இருக்கிறது என்று ஊர் பேசுகிறதே…
அந்த சுகத்துக்காகதான் போகாமல்
ஏதோ இருக்கிறது… என் உயிரும்!



அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

எம் காதலைப் பற்றி அலர் எழுவதால் அரிய உயிர் போகாமல் நிற்கின்றது; எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும் அறியாமலிருக்கின்றனர்.


நம்மிருவரையும் தொடர்புபடுத்தி
கேலி பேசும் நண்பர்க்கெல்லாம் தெரியுமா?
அதுதான் நம் காதல் வளர உதவுகிறதென!




மலரன்ன கண்ணா ளருமை யறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்.

மலர்போன்ற கண்ண உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

நீயெனக்குக் கிடைத்தது
வதந்தியாகப் பரவுகிறதென வருந்துகிறாய்.
பின்னே, வரம் கிடைத்தால் வதந்தி பரவாதா?


உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

ஊரார் எல்லாரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ? (பொருந்தும்). அந்த அலர் பெறமுடியாமலிருந்த பெற்றாற்போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது

நம் காதல் எல்லோருக்கும் தெரிந்து விட்டதே என வாடுகிறாய்.
இனிக் கவலையில்லையென
குதிக்கிறது காதல்.


கவ்வயாற் கவ்விது காம மதுவின்றேல்
தவ்வென்னுந் தன்மை யிழந்து.

எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று; அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருக்கிப் போய்விடும்.

கொஞ்சம் கொஞ்சமாய்ப்
போதையேற்றிக் கொ(ள்/ல்)கிறதே!
இது கள்ளா? காதலா?


களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் மினிது

காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

உன்னை ஒருமுறைச் சந்தித்ததற்கே
நிலவைத் தொட்டவனைப் போல
ஊருக்குள் எனக்குப் பெருமை!


கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொன் டற்ற.

காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்டசெதி போல் எங்கும் பரந்துவிட்டது.

ஊரார்ப் பேச்சில் எருவுண்டு
தாயின் வசையில் நீர்குடித்து
பயந்து பயந்து பூக்கிறது உன் காதல்.


ஊரவர் கௌவை யெருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.

இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

நம்மை சேர்த்து வைத்துப் பேசியேப்
பிரிக்கப் பார்க்கிறது உலகம்.
நெய்யூற்றியா அணையும் நெருப்பு?


நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காமம் நுதுப்பே மெனல்.

அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

வெட்கம் கெட்டுப் பேசுமுலகம்.
அதற்கெல்லாம் நீ வெட்கப்படாதே!
வெட்கப் படுவதென்றால்
என்னிடம் மட்டும் வெட்கப்படு
!

அலர்நாண லொல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நான நன்ந்தக் கடை.

அஞ்சவேண்டா மென்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும் நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?

ஊருக்கேத் தெரிந்தபின்னும்
வீட்டில் சம்மதிக்கவில்லையென்றால்…
ஓடிப்போகலாமா என்கிறாய்.
என்னிடம் வண்டியிருக்கிறதென்கிறேன்.



தாம்வேண்டி நல்குவர் காதலர் யாம்வேண்டிற்
கௌவை யெடுத்ததிவ் வூர்.

யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர். அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

காதல் பூக்கும் மாதம் - 60

6. அலர் அறிவுறுத்தல்

காதல்
புரியவில்லையென்று போகத்துடித்தாலும்,
உனக்கும் எனக்கும்
‘ஏதோ’ இருக்கிறது என்று ஊர் பேசுகிறதே…
அந்த சுகத்துக்காகதான் போகாமல்
ஏதோ இருக்கிறது… என் உயிரும்!


அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

எம் காதலைப் பற்றி அலர் எழுவதால் அரிய உயிர் போகாமல் நிற்கின்றது; எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும் அறியாமலிருக்கின்றனர்.


நம்மிருவரையும் தொடர்புபடுத்தி
கேலி பேசும் நண்பர்க்கெல்லாம் தெரியுமா?
அதுதான் நம் காதல் வளர உதவுகிறதென!




மலரன்ன கண்ணா ளருமை யறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்.

மலர்போன்ற கண்ண உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

நீயெனக்குக் கிடைத்தது
வதந்தியாகப் பரவுகிறதென வருந்துகிறாய்.
பின்னே, வரம் கிடைத்தால் வதந்தி பரவாதா?


உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

ஊரார் எல்லாரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ? (பொருந்தும்). அந்த அலர் பெறமுடியாமலிருந்த பெற்றாற்போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது

நம் காதல் எல்லோருக்கும் தெரிந்து விட்டதே என வாடுகிறாய்.
இனிக் கவலையில்லையென
குதிக்கிறது காதல்.


கவ்வயாற் கவ்விது காம மதுவின்றேல்
தவ்வென்னுந் தன்மை யிழந்து.

எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று; அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருக்கிப் போய்விடும்.

கொஞ்சம் கொஞ்சமாய்ப்
போதையேற்றிக் கொ(ள்/ல்)கிறதே!
இது கள்ளா? காதலா?


களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் மினிது.

காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

உன்னை ஒருமுறைச் சந்தித்ததற்கே
நிலவைத் தொட்டவனைப் போல
ஊருக்குள் எனக்குப் பெருமை!




கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொன் டற்ற.

காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்டசெதி போல் எங்கும் பரந்துவிட்டது.

ஊரார்ப் பேச்சில் எருவுண்டு
தாயின் வசையில் நீர்குடித்து
பயந்து பயந்து பூக்கிறது உன் காதல்.




ஊரவர் கௌவை யெருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.

இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

நம்மை சேர்த்து வைத்துப் பேசியேப்
பிரிக்கப் பார்க்கிறது உலகம்.
நெய்யூற்றியா அணையும் நெருப்பு?



நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காமம் நுதுப்பே மெனல்.

அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

வெட்கம் கெட்டுப் பேசுமுலகம்.
அதற்கெல்லாம் நீ வெட்கப்படாதே!
வெட்கப் படுவதென்றால்
என்னிடம் மட்டும் வெட்கப்படு!



அலர்நாண லொல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நான நன்ந்தக் கடை.

அஞ்சவேண்டா மென்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும் நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?

ஊருக்கேத் தெரிந்தபின்னும்
வீட்டில் சம்மதிக்கவில்லையென்றால்…
ஓடிப்போகலாமா என்கிறாய்.
என்னிடம் வண்டியிருக்கிறதென்கிறேன்.



தாம்வேண்டி நல்குவர் காதலர் யாம்வேண்டிற்
கௌவை யெடுத்ததிவ் வூர்.

யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர். அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

காதல் பூக்கும் மாதம் - 50

5. காதல் சிறப்புரைத்தல்

பசும்பால் தருகிறாய். தேனும் தருகிறாய்.
“இரண்டும் கலந்து தா” என்றால்…
முத்தமிட்டு விட்டு ஓடுகிறாய்!



பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர், பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

என்னுயிரின் உருவம் நீ!
உன்னுயிரின் உருவம் நான்!
நம் காதலின் உருவம்?
வேறென்ன… குழந்தைதான்!


உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு.

இம்மடந்தையோடு என்னிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.


நீயென் கண்ணில் இருக்கிறாயென்றேன்.
எந்தக் கண்ணில்? என்கிறாய்.
அகக்கண்ணில்!


கருமணியுட் பாவாய்நீ போதாயாம் வீழுந்
திருநுதற் கில்லை யிடம்.

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடும்! யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!

நீ என்னைவிட்டுப் பிரிகிறபோதும்
கையற்ற நிலையில் நான்.
உயிர் பிரிவதற்கு சாட்சியாய்
உயிரே நிற்கிறது.


வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாதல்
அதற்கண்ணள் நீங்கு மிடத்து.

ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள்; பிரியும் போது உயிருக்குச் சாவு போன்றவள்.


உன்னை மறந்தால் மறுபடி நினைப்பேனா?
தெரியவில்லை…
எனக்குதான் உன்னை மறக்கவேத் தெரியாதே!

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
னொள்ளமர்க் கண்ணாள் குணம்.

போர் செய்யும் கண்களை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும்; ஆனால் ஒருபோதும் மறந்ததில்லையே!


என் கண்ணுள்ளிருக்கும் நீ
இமைக்கிற போது மட்டும் வருந்துகிறாய்…
என்னிமைக்கு வலிக்குமோ என!


கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்
நுண்ணியரெங் காத லவர்.

எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போகமாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்தமாட்டார்; அவர் அவ்வளவு நுட்பமானவர்.


மையிடுகிறாயா?
உன் கண்ணுள்ளிருக்கும் எனக்கு
வேலிபோடுகிறாயா?


கண்ணுள்ளார் காத லவ்ராகக் கண்ணும்
மெழுதேங் கரப்பாக் கறிந்து.

எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார். ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.


நீ சூடாக எதுவும் உண்பதில்லை.
உன்னுள் நான்!
நான் வெந்நீரில் குளிப்பதே இல்லை.
என் ஒவ்வோர் அணுவிலும்
நீ!

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட
லஞ்சுவதும் வேபாக் கறிந்து.

எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார்; ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.


உன் கண்ணுள்ளிருக்கும் நான் மறைகிறேனெனெ
இமைக்காமல் இருக்காதே.
உன்னைத் தூங்கவிடவில்லையென
உலகம் என்மேல் பழி சுமத்தும்.


இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே
யேதில ரென்னுமிவ் வூர்.

கண் இமைத்தால் காதலர் மறைந்துபோதலை அறிகின்றேன். அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.


உன்னைப் பிரிந்துவிட்டேனா?
வசிப்பதுதானடி இங்கே…
வாழ்வதெல்லாம் உன்னுள்ளே!


உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ
ரேதில ரென்னுமிவ் வூர்.
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார்; ஆனால் அதையறியாமல் பிரிந்து வாழ்கின்றார், ‘அன்பில்லாதவர்’ என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

காதல் பூக்கும் மாதம் - 40

4. நலம் புனைந்து உரைத்தல்

நீ தூங்க அனிச்சப்பூக்களைத் தூவினேன்,
கதறுகின்றனப் பூக்கள்…
உனக்கு வலிக்குமென!


நன்னீரை வாழி யனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்! நீ வாழ்க! யாம் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள்.

மொட்டுப் பூவாவதை
பார்க்க ஆசை.
மெதுவாக இமைகளைத் திற!


மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குன்றாய்!

மூங்கில் தோள்; மாந்தளிர் மேனி;
முத்துப் பல்; நறுமணம் வியர்வை ;கூர்வேல் கண்.
- இலக்கணப்படி உவமை.
காதல்படி உண்மை.

முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி; முத்தே பல்; இயற்கை மணமே மணம்; வேலே மையுண்ட கண்.

பூங்காப் பக்கம் செல்லாதே.
உன் கண்போல் பூக்கவில்லையேயென
பூக்களெல்லாம் கண்ணீர் விடுகின்றன.


காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.

குவளை மலர்கள் காணும் தன்மைப்பெற்றுக் கொண்டால், “இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்”

உன் கூந்தலேறிய மகிழ்ச்சியில்
அநிச்ச மலர் சிரிக்கிறது.
அதன் எடைதாங்காமல்
உன் மெல்லிடையோ அழுகிறது.


அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினாள்; அவற்றால் நொந்து வருந்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

நட்சத்திரமெல்லாம் மின்னுகிறதா?
அடிப்போடி…
நிலவெது? உன் முகமெது? எனத் தெரியாமல்
மலங்க மலங்க விழிக்கிறது!



மதியு மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்.

விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

உன் முகம் நிலா என்கிறேன்.
கோபிக்கிறாய்.
சரி சரி பௌர்ணமிதான்!



அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளதுபோல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ? இல்லையே!

உன் முகம்போல் ஒளியில்லாததால்
என்னிடமிருந்து தப்பித்தது…
நிலவு!

மாதர் முகம்போலொளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல் ஒளி வீச உன்னால் முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

உன் போல ஒளிவீச
நிலவுக்கும் ஆசையாம்.
என்ன ரகசியமென சொல்லிக்கொடு.


மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்
பலர்காணத் தோன்றன் மதி.

திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

பூக்களும் மயிலிறகும் கூட
உன் பாதத்துக்கு வலிக்கிறதா?
இனி தென்றலில் நட!


அனிச்சமு மன்னத்தின் றூவியும் மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.

அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவை மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை

காதல் பூக்கும் மாதம் - 30

3. புணர்ச்சி மகிழ்தல்


அழகு.இசை.சுவை.மணம்.ஸ்பரிசம்.
இப்படி நீ தரும் ஐம்புல
இன்பங்களுக்கும்
மேலாகத் தர என்னிடம் இருக்கிறது
காதல்!


கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டோடி கண்ணே யுள.

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.


காதலில் விழவும் வைக்கிறாய்.
காதலோடு எழவும் வைக்கிறாய்.
நீ நோயா? மருந்தா?


பிணிக்கு மருந்து பிறம னணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன. ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

உன் தோள் சாய்ந்திருந்த தனிமைப் பொழுதில்
“இப்படியே சொர்க்கம் போய் விடலாமா?” என்கிறாய்.
இப்போது மட்டும் எங்கிருக்கிறோம்?


தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு.

தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில்போல் இனிமை உடையதோ?

விலகினால் சுடும்,
நெருங்கினால் குளிரும் ஒரு தீ…
இவள் ஒருத்தி தான்!


நீங்கிற் றெறூஉங் குறுகுங்ஆற் றண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றா ளிவள்.

நீங்கினால் சுடுகின்றது. அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது. இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்?

ஒரு தேவதையென்னைக் காதலிப்பாளென
சிறுவயதில் நானும் நினைத்ததுண்டு!
இன்றோ என் தோள்சாய்ந்தபடி
என்னோடு நடக்கிறாய் என் காதலியாக…
இதுதான் நினைத்தது ‘நடப்பது’என்பதா?


வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோள்தாழ் கதுப்பினா டோள்.

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைந்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

தழுவும்போதெல்லாம்
என்னுள் நழுவுகிறாய்.
தோல் போர்த்திய அமிழ்தை
தோள் என்று நம்ப சொல்கிறாயா?


உறுதோறு றுயிர் தளிப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தி னியன்றன தோள்.

பொருந்தும்போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாத் தீண்டுதலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அணைத்துச் சேரும்போது,
“பகுத்துண்ணும் இன்பம் இதுவா?” என்றேன்.
இல்லையெனச் சொல்லி,
அணைத்துச் சேர்த்தாய் நம் உதடுகளை!

தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு.

அழகிய மாமை நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுத்து உண்டாற் போன்றது.

இறுக்கி அணைக்கிறாய்.
மூச்சு வாங்குகிறது…
இடையில் அகப்பட்ட காற்று!


வீழு மிருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும், தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவர்க்கும் இனிமை உடையதாகும்.

நமக்குள்ளான சண்டையில்
யார் முதலில் விட்டுக் கொடுப்பதென
ஆரம்பிக்கிறது அடுத்த சண்டை…

ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதல். ஊடலை உணர்ந்து விடுதல். அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப்பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

அணைத்துப் படித்தால்
எல்லாப் பக்கமும்
காதல் வழிகிற
கவிதைப் புத்தகம் நீ!


அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு.

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல். நூற்பொருள்களை அறிய அறிய அறியாமை கண்டாற் போன்றது.


நீ தூங்க அனிச்சப்பூக்களைத் தூவினேன்,
கதறுகின்றனப் பூக்கள்…
உனக்கு வலிக்குமென!

காதல் பூக்கும் மாதம் - 20

2. குறிப்பறிதல்

ஒரு பார்வையில் சாம்பலாக்குகிறாய்…
மறு பார்வையிலோ
ஃபீனிக்ஸ் பறவையாய் மாற்றுகிறாய்!



இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

என் காதல் கடலென்றிருந்தேன்…
அரைக்கண்ணில் பார்க்கும்
உன் கள்ளப் பார்வையில்
என் முழுக்காதலும் ஒரு துளியானது!

கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற்
செம்பாக மன்று பெரிது.

கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று; அதைவிடப் பெரிய பகுதியாகும்.

உன் பார்வையில்
மழையாய்ப் பொழிகிறதென் ஆண்மை!
என் பார்வையில்அருவியாய்
வழிகிறது உன் வெட்கம்!
மழையிலும் அருவியிலும்
நனைகிறது நம் காதல்!


நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர்.

என்னை நோக்கினாள்; யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தாள்; அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

உன்னைப் பார்க்கிறேன்…
மண்ணைப் பார்க்கிறாய்!
விண்ணைப் பார்க்கிறேன்…
என்னைப் பார்க்கிறாய்!
என்னுள் சேர்த்தப் புன்னகையோ
உன்னுள் பூக்கிறது வெட்கத்தோடு!


யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற்
றானோக்கி மெல்ல நகும்.

யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

அரைக்கண்ணில் பார்த்தே
முழு உயிரையும் குடிக்கிறாய்.
இன்னும் நேராய்ப் பார்த்தால்?


குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

என்னை நேராக குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.

காதலைத் தவிர
எல்லாவற்றையும் பேசுகிறாய்.
ஆனால் காதலோடு!


உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப் படும்

புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.


நீ ஒளித்து ஒளித்து வைத்தாலும்
உன் பொய்க் கோபத்திலும் செல்ல முறைப்பிலும்
மெல்ல மெல்ல வெளிப்படுகிறது
உன் காதல்.


செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும்
உறாஅர்போன் னூற்றார் குறிப்பு.

பகைகொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்போல் பார்வையும் புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

நீ சிரிப்பது அழகு.
என்னைப் பார்த்து சிரிப்பது பேரழகு.
நான் பார்க்கும்போது சிரிப்பதின் அழகை
வருணிக்க ஒரு வார்த்தைக் கொடு.


அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யா னோக்காப்
பசையினள் பைய நகும்.

யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

பார்த்தும் பார்க்காமல் என் பார்வை,
பார்க்காததைப் போல பார்க்கும் உன் ்பார்வை,
காதல் நடத்துகிறது கண்ணாமூச்சி!

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.

புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.

பார்வைகளே பாசையானபின்
வார்த்தைகள் வந்தும்
என்ன செய்யும்?


கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில.

கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

காதல் பூக்கும் மாதம் - 10

நண்பர்களே இது திருக்குறளுக்கான உரையுமல்ல, மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கான மொழிபெயர்ப்புமல்ல. ஏனென்றால் திருக்குறளின் பொருள் பார்த்து மட்டும் நான் இதை எழுதவில்லை. ஏதாவது ஒரு கருவை மட்டும் எடுத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த வடிவத்தில் எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

1 .தகையணங்குறுத்தல்


வெள்ளை சுடிதாரில் தேவதையாகிறாய்…
பச்சை, நீல வண்ணங்களில் மயிலாகிறாய்…
எப்பொழுது பெண்ணாவாய்?

அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு

தெய்வப் பெண்ணோ!மயிலோ?கனமாக குழை(காதணி) அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!

உன்னைப் பார்க்கையில்,உன்னழகே இப்படித் தாக்குகிறதே…
நீ எதிர்பார்வையெல்லாம் பார்த்தால், என்னால் முடியாதடி!
அது உன் தலைமையில் ஒரு தேவதைப்படையே தாக்குவதைப்போல…

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

இவள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல், தானே தாக்கி வருத்தும் ஓர் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.


எமன் எப்படியிருப்பான்?
உன் வெட்கப் பார்வை வீசும் ‘பாச’க்கயிறு
உயிரை இறுக்கும் போது புரிகிறது.
உன்னைப் போலதான் இருப்பாள்!

பண்டெறியேன் கூற்றெ பதனை இனியறிந்தேன்பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன் ; அது பெண் தன்மையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

எல்லா பாகங்களும் அழகாக வெட்கப்படும்போது
உன் பார்வை மட்டும் என் உயிரைக் குடிக்கிறதே
உனக்குள் ஏனிந்த முரண்பாடு?


கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்பேதைக் கமர்த்தன கண்.

பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

நீ பார்க்கும்போது
எமனாய் மாறி என்னைக் கொல்கிறது!
நான் பார்க்கும்போது
மானாய் மாறி அங்குமிங்கும் ஓடுகிறது!
நாம் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளாத தருணங்களில் மட்டுமே
உன் கண்கள், கண்களாய் இருக்குமோ?


கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
னோக்கமிம் மூன்று முடைத்து.

எமனோ? கண்ணோ? மானோ? இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.

புருவங்களே!
கொஞ்சம் இவள் கண்களை மறையுங்களேன்..
பார்த்தேக் கொல்கிறாளே!


கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்.

வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கணகள் யான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

உன் துப்பட்டாவிற்குத் தெரியுமா?
அது கோயில்யானையின் முகபடாமை
விட பெருமை வாய்ந்ததென்று?



கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.

மாதருடைய சாயாத மார்பின்மேல் அணிந்த ஆடை மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.

உன் இருவிழிகளின் ஒளி தாங்காமல் தான்
நீ நிலம் நோக்கும் போதுமட்டும் உன்னைப் பார்க்கிறேன்!
ஆனால் உன் ஒற்றை நெற்றிப் பார்த்தே
என் இதயம் நொறுங்குகிறது!



ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் முட்குமென் பீடு.

போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!

மற்ற பெண்களெல்லாம் கண்மை தீட்டினால்
நீ “இளமை” தீட்டி வருகிறாய் கண்ணுக்கு.
முகத்துக்கு மஞ்சள் பூசியும் அலுத்துவிட்டதா?
இப்படி வெட்கத்தைப் பூசிக் கொண்டு வருகிறாய்.
இதற்குமேலும் வேறென்ன வேண்டும் உன் முகத்துக்கு?


பிணையேர் மடநோக்கும் நாணும் முடையாட்
கணியவனோ ஏதில தந்து.

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?

கள்ளைப் பருகினால்தான்
போதை தலைக்கேறுமாம்.
கள்ளி! உன்னைப் பார்த்தாலே
போதை மனதுக்கேறுகிறதே!



உண்டார்க் ணல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.

கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லை.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நான் கோழை தான் ...

நான் கோழை தான் ...
அன்று
உன் மெளனத்தால் ...
உண்மைகளை
உரக்க பேச முடியாமல்
போனதால்
எழுத்துகளில்
உமிழ்ந்து கொள்கிறேன் என்னையே...

ஒரு நிஜம்...
நான் தைரியசாலி தான்...
நானாவது
எழுதி வைத்திருக்கிறேனே....
மாறாக முடியாமல் இருக்கும்
நம் நினைவுகளை....
s.s.raj ன் கவிதைத் தோப்பாக ....

பிரமித்து போன இரவுகள் ..................

பிரமித்து போன இரவுகள் ..................
ஆம்
நான்
விடிய விடிய
தூங்காத
அந்த இரவு ............

இத்தனை அழகியா நீ?!!!...........

உன்னை நான் பார்த்த
அந்த இரவு
உன்னை தூங்கவிடாமல்
தடுத்திருக்க வேண்டும்
என் உளறல்களால் ...

ஆம்....
அந்த கன்ன குழியில் தானடி
நான் தவம் கிடக்கிறேன்
உன் பெயரை உச்சரித்தபடி
உன் வரவுக்காக
தினமும் காத்திருக்கும்

கலாபக்காதலன் சாம் ...........!!!!!!!!!!!!!!

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

அத்தனையும் பொய்

தோல்விகள்
என் வாழ்க்கையில்
வரும் போதெல்லாம்
உன் நியாபகங்கள்....
நீ என்னை விட்டு
போனபின்னும்
இன்னும் நான் உயிரோடு தான்
வாழ்கிறேன்.....
உன்னிடம் நான் எத்தனையோ முறை
சொல்லி இருப்பேன்
நீ இல்லை என்றால்
மறுகணம் இறந்து போவேன் என்று......
அத்தனையும் பொய் என்று சொல்ல முடியாது...
உண்மையில்
நினைவுகளால் நிஜம் தொலைத்தேன் ....
இன்று
சுக படுகிறேன் நீ இல்லாமல் கூட.....
வாழ்க்கை வாழ தான் என்று
தோல்விகள் தான்
சொல்லித்தருகின்றன....

புரிந்தது

எனக்கும் உனக்கும்
நிறைய
கருத்து வேறுபாடுகள்....
நாம் பிரிந்து போவதே
நலம் என்று
நானும் நீயும்
ஒப்பந்தம் போட்டு பிரிந்தோம்
அதி மேதாவிகளாய்....
பின்பு தான்
புரிந்தது
இந்த உலகில்
ஆணும் ஆணும் ,
பெண்ணும் பெண்ணும்
சேர்ந்து வாழ்வது
எப்படி
இயற்கைக்கு மாறானதோ
அது போல் தான்
நேர் ,எதிர்
இணைவது இல்லறம்
என்கிறார்கள்
அனுபவித்தவர்கள்....
இன்று காத்திருக்கிறோம்....
உன் அழைப்பிற்காக நானும்
என் அழைப்பிற்காக நீயும்

என் வாழ்க்கை


என் வாழ்க்கை
விதியை
நானே எழுத நினைப்பதால் தான்
அடிக்கடி தோற்றுபோய் அழுகிறேன்........
எனக்காய் ஒரு வரம் வாங்கி கொடு ....
என் கண்மணியே .....
கண்ணீர் இல்லாத
ஒரு நாள் வேண்டும்...
என் ஆன்மாவிற்கு
அழுவதற்கு கூட இனி
கண்ணீர் இல்லை....
வலிகளால் வாழ்க்கை
எனக்கு மட்டும் ஏனடி.....

சிக்கிரம் சொல்.....

நான் உன்னை
மறுத்த பின்புமா
காதல் செய்கிறாய்? என்று
ஆச்சரியமாக என்னை கேட்டாய்.. .
நீ என்னை வெறுத்த போதே உன்னை
காதல் செய்தேனடி...
இன்று
நீயும் என்னை காதல் செய்கிறாய் ....
என்னிடம் சொல்லாவிட்டாலும்
உன்னிடமாவது சொல்....
உனக்கு தான்
எதுவும் தாமதமாய் தான் புரியும் ?.....
சிக்கிரம் சொல்.....
உன்னிடம்
சிலநிமிடமாவது
நான்
வாழ்வது சுகம்....

உன் நிலை சொல்லடி?.....

என் வலிகள்
சொல்ல முடியவில்லை ......
உன்னை விட்டு
பிரிந்து விடுவேனோ
என்ற பயம்
என்னை
உறங்க விடாமல் செய்கிறது....
ஏனடி
இத்தனை அவஸ்தைகள்....
உன்னிடம்
என் அன்பை புரிய வைக்காமல்
தவிப்பது கொடுமையாய்
இருக்குதடி...
உன் நிலை சொல்லடி?.....

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

என் காதலையும் சேர்த்து....

என்னை
புரிந்து கொள்ளாத
உன் மேல்
எனக்கு தீராத கோபம்....
உன்னை நிறையவே திட்டி
கடிதம் எழுதி விட்டேன் ...
நீ வருத்த படுவாய் என்று
பத்திரமாய்
மறைத்து விட்டேன்
மவுனமாய்
என் காதலையும் சேர்த்து....

காரணம் கூட

உன் நினைவுகளை
கவிதை பூக்களாய்
மாற்றி

உன்னிடம்
ஒப்டைக்க
நெடுநாட்களாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...

நீ என்னை
மறந்து போனதற்கான
காரணம் கூட
அறியாமல்....

வலி அதிகம் என்பது....

ஒரு துளி
கண்ணீரில்
என்னை
தோற்க்கடித்தவளே...

ஏமாற்றம்
உன்னை தீண்டும் போதே தெரியும்...
ஏமாந்து போனவர்களை விட
ஏமாற்றியவர்களுக்கே
வலி அதிகம் என்பது....

ஏமாந்த

நான்
காதலித்து
ஏமாந்த
அந்த நாட்களை
யாரிடமும்
சொல்லி அழ கூட முடியவில்லை...

ஆம்...
அந்த கொச்சையான
காதலின் வலி
எனக்கு மட்டுமே தெரியும்....

உன்னை தீண்டி இருக்குமா?....

தோழியே!
என்னை
சதை திண்ணியாய் எண்ணி
என் காதலிக்கு
சக்களத்தியாக ஆக்கத்தான்
உன்னிடம் பேசுகிறேன் என்று
என் நட்பை
சாக்கடையில்
தள்ளி விட்டாயடி...

உன் சதை
நரம்புகளிடம் கேட்டு பார்...
நாம் நட்பாய்
பழகிய காலத்தில்
என் வார்த்தைகளாவது
உன்னை
தீண்டி இருக்குமா?....

போய்தான் சொல்லாயோ பொன்வண்டே!

அந்தி
மாலையிலே நினைப்பதெல்லாமே!- நீ
போய்தான் சொல்லாயோ பொன்வண்டே!
பூவையரே! மழலையரே! பொன்னான தோழியரே-
காதல் தலைவி எந்தனுக்கு போகாத பொழுதுள்ளதே!
காதல் தலைவி நானே தலைவன் பற்றி -அந்தி
மாலையிலே நினைப்பதெல்லாமே!- நீ
போய்தான் சொல்லாயோ பொன்வண்டே!
பூவையரே! மழலையரே! பொன்னான தோழியரே-
காதல் தலைவி எந்தனுக்கு போகாத பொழுதுள்ளதே!