புதன், 25 ஆகஸ்ட், 2010

நட்பும் கூட

காதல் கிடைக்காதவர்களும்
காதலில் தோற்றவர்களும்
ஏனோ
...இந்த காதலை அசிங்கபடுத்துகிறார்கள்.....

உண்மையில்
ஒரு நொடி காதல் என்றாலும்
அதன் சுகம் தனி தான் ...
காதல் திருமணத்தில் முடிந்தால் தான்
உண்மை காதல் என்கிறார்கள்......

அப்படி என்றால்
உண்மையாய் திருமணதிற்கு பின்
காதல் செய்பவர்கள்
எத்தனை பேர் ?....

காதல்...
காதல் தான் ....
சேர்ந்தாலும்...
சேராமல் போனாலும்
சுகமானது தான்
உண்மை காதல் ...

காதலை விட
நட்பை சிலர் பெரிதென்கிறார்கள்...
அவர்களுக்கு தெரியவில்லை
நட்பும் கூட
ஒரு வகை காதல் என்பது.....

அழகான காதல்

நீ விலகியதில்
என் காதலுக்கு உன் மேல் வருத்தம்!
மீண்டும் நீ வந்ததும்
அத்தனை வருத்தங்களும் அரைநொடியில் மாறிப் போயின…
அழகானக் காதலாய்!
(((((((((((சாம் )))))))))