திங்கள், 16 ஆகஸ்ட், 2010

புரிந்தது

எனக்கும் உனக்கும்
நிறைய
கருத்து வேறுபாடுகள்....
நாம் பிரிந்து போவதே
நலம் என்று
நானும் நீயும்
ஒப்பந்தம் போட்டு பிரிந்தோம்
அதி மேதாவிகளாய்....
பின்பு தான்
புரிந்தது
இந்த உலகில்
ஆணும் ஆணும் ,
பெண்ணும் பெண்ணும்
சேர்ந்து வாழ்வது
எப்படி
இயற்கைக்கு மாறானதோ
அது போல் தான்
நேர் ,எதிர்
இணைவது இல்லறம்
என்கிறார்கள்
அனுபவித்தவர்கள்....
இன்று காத்திருக்கிறோம்....
உன் அழைப்பிற்காக நானும்
என் அழைப்பிற்காக நீயும்