சனி, 5 பிப்ரவரி, 2011

சுகமாய்


காதல் சுகமானது
உன் பெயர் சொல்லி
அழைக்கும் போது....
கண்கள் மூடி
தவிக்கும் போது தான்
தெரிகிறது
காதல் தவறில்லை என்று....

வேர்கள் இல்லாத
தாவரங்களா?...
காம வேர்கள் இல்லாத
நட்பும் இல்லை
காதலும் இல்லை...
வேர்கள் வெளியில்
தெரிந்தால்
இறந்து போகும்
என்றே
புதைந்து கிடக்கின்றன
நம்முள்.....

வேர்களை
ஒளித்து
மறைத்து
காதல் செய்கிறேன்
சுகமாய்
என்னுள்..

ஆண் ,பெண் நட்பு...



.

ஆண் ,பெண்
நேசம் புனிதமானது...

பெண்கள்...
யார்
நம் மேல்
உண்மையான அன்பு
செலுத்துகிறார்கள் என்று
புரிந்து கொள்வதில் தான்
தவறு செய்கிறார்கள்...

ஒரு ஆண்
தன்னை நெருங்கி வந்தாலே
பெண்கள்
சந்தேகக் கண்ணோடு
பார்க்கிறார்கள்...
ஒதுங்கி கொள்கிறார்கள்...

ஆண்கள்
பெண்களிடம் பேச
விரும்புவது
மோகத்தால் மட்டும் அல்ல...
அது ரகசிய உறவுக்கான
அழைப்பும் அல்ல...
உண்மையில்
ஆண்களிடம்
பெண்மை கொட்டி கிடக்கிறது...
அன்பு,பாசம் நேசம் வேண்டி....

பெரும்பாலான ஆண்கள்
பெண்களிடம்
நல்ல நட்பு
பாராட்டவே விரும்புகிறார்கள்...

உண்மையில்
பிரச்னைக்குரிய
பெண்களின் பிடியில் இருந்து
ஆண்கள்
விலகவே
விரும்புகிறார்கள்...