ஞாயிறு, 21 நவம்பர், 2010

நட்போடு காதலித்து...

நட்பைதான் நான்
காதலிக்கிறேன்
என்கிறாய்
காதலிடம்
நட்பாய்
இருக்கிறேன் நான்
என் காதல் நீ


எல்லாரும் எனக்கு
ஒன்றுதான் என்கிறாய்
எனக்கும் காதலி
நீ ஒன்று மட்டும்தான்


நட்பு எல்லாவற்றையும்
கொடுக்கும்
காதலைத்தவிர...
காதல் எல்லாவற்றையும்
கொடுக்கும்
நட்பையும் சேர்த்து
தெரியுமா??


காதலித்தால்
நம் நட்பு சாகும் என்கிறாய்
சாகும் வரை நட்போடு
இருக்கத்தான் உன்னைக்
காதலிக்கிறேன்
உணர்ந்து கொள்ளடி..




உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?







நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்






நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்








எனக்கு நீ எப்பொழுதுமே
நண்பனாக வேண்டும்
என்கிறாய்
எனக்கு நீ எப்பொழுதுமே
நட்பான மனைவியாக
வேண்டும் என்றுதான்
சொல்கிறேன்
நான்..








நான் பிடிவாதக்காரி
என்கிறாய்
எனக்குப்பிடித்த..
என்னைப் பிடித்த..
வாதக்காரி நீ...








அனைவரிடமும்
நட்புகொள்ள
முடியும்
ஆனால்
உன்னிடம் மட்டும் தான்
காதல்
கொள்ளமுடியும்
தெரிந்துகொள்ளடி...

திங்கள், 15 நவம்பர், 2010

என் நாட்குறிப்பில





என்றோ நீ
என் கைக்கெட்டாத தூரத்தில்
கார்மேகத்துள் புதைந்து விட்டாய்!

கருகிய நெஞ்சத்தில்
விரக்தி மணம்
வீசும் போதெல்லாம்
உன் முகமே
என் மன வானில் மலர…

என் நெஞ்சமெங்கும்
உன் நினைவுகளின் விம்பங்கள்!

என் நாட் குறிப்பெங்கும்
உன் வார்த்தைப் புலம்பல்களே!

படகுகள்


வானமெங்கும் கானம் பாடி
என் வண்ணச் சிறகை விரித்து
வான் வெளியே வலம் வரும்
ஒரு வசந்த கால
பறவையல்ல நான்!

பிறக்கும் போதே
பாசம்…
நேசம்… என்னும்
வேர்களும் விழுதுகளும்
அறுக்கப்பட்டு…

பாவச் சிலுவைகளை
நெஞ்சில் சுமந்தபடி
பாரிலே பிறந்த பறவை நான்!

ஓ…!
இந்த வேசம்
நிறைந்த உலகிலே
பாசம் என்னும்
நேசம் தேடி…

இதயத்தில்
பாரம் சுமந்தபடி
பறக்கும்
பாலைவனப் பறவை நான்!

ம்…!
உன் வீட்டு
வாசலைக் கூட
நான் அடிக்கடி
கடந்து செல்கின்றேன்!

அங்கே…
கலைந்திருக்கும்
கோலங்கள் கண்டு
கண்ணீர் சிந்தியும்
சென்றிருக்கின்றேன்!
இழப்புகள் என்பது
உனக்கும் எனக்கும்
வெவ்வேறாக இருக்கலாம்!

ஆனால்
வேதனை சுமந்து
வெந்து துடித்து
ஏக்கத்தில் தவித்து…

இங்கே…
நாளும் ஒரே படகில்
பயணம் செய்பவரென்பது
முற்றிலும் உண்மைதான்!

ம்…!
இனி
இரு வேறாக
தனித்தனி படகில்தான்
போக வேண்டும் என்றாலும் போவோம்!

எப்படியோ …
எப்போதோ …
ஒரு நிமிடம் முடிந்தால்
எங்கேனும் ஒரு கரையில்

நினைப்போம்…!
நிற்போம்…!
நிதானிப்போம்…!

புதன், 10 நவம்பர், 2010

அது ஒரு அழகிய

என் நெஞ்சில்
உன் முகம்
அழகிய சிற்பமாய்!

ஓ…!
எந்த உளி கொண்டு
இத்தனை அழகாய்
செதுக்கி விட்டு…

எனை நிர்க்கதியாய்
தவிக்கவிட்டுச் சென்றாய்…?

ம்…!
என் உணர்வுகளை
எங்கோ தொலைத்து விட்டு
உன் நினைவுகள் இன்றி
வாழவேண்டும் என்றுதான்
தினமும் முயற்சிக்கிறேன்.

ஆனாலும்
ஒவ்வொரு பொழுதும்
அது தோல்வியிலேயே
முடிந்து போகிறது!

நீ என்னை விட்டு
விலகியிருக்கும் துக்கம்
தினமும் எனை தூக்கிலிட…

எப்போதும்
என் யோசனைகள்
உன்னைச் சுற்றியே
வட்டமிட வட்டமிட…

துரத்தும் உன் நினைவுகள்
என் விழிகளின்
தூக்கத்தை தொலைத்து விட…

உருண்டு…
பிரண்டு…
உறக்கத்தை தேடுகின்றேன்!

அப்போது…
தொலைபேசியின் சிணுங்கல்!

“ஹலோ”… என்றேன்!

“அன்பே!… நலமா”… என்றாய்!

ஓ!… அது நீதான்!

“ம்ம்… நலம்”… என்றேன்!

உன் கனிவான பேச்சுக்கள்
என் காதுகளை நிறைக்கிறது!

இறுதியில்…
“என் உயிர் உன் வசம்”… என்றாய்!

உன் வார்த்தையின்
எதிர்பாராத திருப்பத்தை
என்னால்
நம்பவே முடியவில்லை!

இதை
நீயா சொன்னாய்…?

சொற்கள் தடக்கி விழ
தட்டுத் தடுமாறி…
விக்கித்து…

இடறி விழுந்து…
கண் விழித்து…
எழுந்து பார்க்கின்றேன்!

ஓ…!
அது ஒரு அழகிய
அதிகாலைக் கனவு!

பூவே! … பூவே!


தென்றலுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
இதமான குளிராக!


நிலவுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
மிதமான ஒளியாக!


பூவே! … பூவே!
உனக்குள் நான் இருப்பேன்
என்றும் வீசும் மணமாக!

அதிசயக் காதல்

அடிக்கடி
உன் முகத்தின் முகவரியை
அசைபோட்டுப் பார்க்கிறேன்!
பார்ப்போர்
எல்லோர் மீதும்
பாசம் வருவதில்லை!

கண்ணில்
காண்போர் எல்லோர் மீதும்
காதல் வருவதில்லை!

ஆனால் எப்படி
உன்மீது மட்டும்
இப்படி ஒரு காதல்!

என் இதயக் கோயிலில்
காதல் வேதங்கள் ஓதப்பட…

தென்றல் தெம்மாங்கு பாடி
ஊருக்கு அஞ்சல் செய்கிறது!

உன் வாசனைகள்
எனைக் கடந்து செல்கிறது!

ம்…!
இதயத்தின்
ஒவ்வொரு அறைகளிலும்
உன் முகம் பதிகிறது!

தாலாட்டும் பூங்காற்றாய்
தழுவிச் செல்லும்
உன் நினைவால்…

என் அனுமதிகள் எதுவுமின்றி
கற்பனை நான்கு திசைகளிலும்
எட்டிப் பார்க்க…

மௌனமாய் கருத்தரித்து
விரல் வழி பிறந்து
வழியும் கவிதைகளை
விடிய விடிய
எழுதி முடிக்கிறேன்!

நெஞ்சினில் அன்பையும்
கண்களில் காதலையும்
உள்ளே தேக்கி வைத்து
தளிர் விட்ட காதலை
உன்னிடம் சொல்லி விட…

கற்பனையாய்
ஆயிரம் கவிதைகள்!
கண்ணாடி முன்
ஆயிரம் ஒத்திகைகள்!

இருந்தும் என்ன பயன்…?

உன்னைக் கண்டவுடன்
உயிரெழுத்து எது
மெய்யெழுத்து எது
எதுவுமே தெரியவில்லை!

எத்தனை மொழிகள்
எனக்குத் தெரிந்திருந்தும்
அத்தனை மொழியையும்
மொத்தமாய் மறந்து
ஒரு மொழியும் தெரியாத
பிஞ்சுக் குழந்தையாய் என் காதல்!

ம்ம்…!
இது அதிசயக் காதல்தான்!

புதன், 8 செப்டம்பர், 2010

இது காதல் பூக்கும் மாதம் – முதல் பகுதி

நண்பர்களே இது திருக்குறளுக்கான உரையுமல்ல, மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கான மொழிபெயர்ப்புமல்ல. ஏனென்றால் திருக்குறளின் பொருள் பார்த்து மட்டும் நான் இதை எழுதவில்லை. ஏதாவது ஒரு கருவை மட்டும் எடுத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த வடிவத்தில் எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்

தனிப்படர் மிகுதி - காதல் பூக்கும் மாதம் - 110

11. தனிப்படர் மிகுதி

உன் நட்பில் விளைந்து
உன்னைக் காதலிக்கும்போது மலர்ந்து
உன்னால் காதலிக்கப்படும்போது கனிகிறது
என் காதல்!



தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.


கோடைமழையைப் போல
நிகழ்கிறது நம் சந்திப்பு…
சந்திக்கும்போதெல்லாம்
அடைமழையாய்ப் பொழிகிறது
காதல்!


வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.

காதலில்லாத
இல்வாழ்க்கை…
வாழ்க்கையில்லை!



வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.


நீ பிரிந்து போனதிலிருந்து
உன்னிடம் கோபித்துக் கொண்டு
என்னிடம் வந்துவிட்டது
நம் காதல்!


வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.

நீ காதலிக்காவிட்டால் பரவாயில்லை
உனக்கும் சேர்த்து
நானே காதலித்து விட்டுப் போகிறேன்…



நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?


நானுன்னைக் காதலிக்க…
நீயென்னைப் பிரிய…
ஊனமாய் நிற்கிறது!
நம் காதல்…



ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது.

காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.


இந்தக் காதலும்
பெண்பால்தான் போல…
எல்லாத் துயரையும்
எனக்கேத் தருகிறது!



பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!


உன் வார்த்தைகளைக் கேட்க முடியாமல்,
மரணித்தது என் செவி மட்டுமல்ல…
இதயமும்தான்!



வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.


நீ துரத்த துரத்த
உன் பின்னேயே வருகிறது இந்த மனம்…
நீ வளர்க்கும்
செல்ல நாய்க்குட்டியைப் போல!



நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
டிசையும் இனிய செவிக்கு.

என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.

கடலலைகளைக் கூட எண்ணிவிடலாம்.
உன்னையே எண்ணிக் கொண்டிருக்கும்
என் நினைவலைகளை?


உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்

நினைந்தவர் புலம்பல் - காதல் பூக்கும் மாதம் - 120

12. நினைந்தவர் புலம்பல்

உன் நினைவுக(ள்)ளைக்
குடித்து குடித்து
போதையிலேயே இருக்கிறது
இந்த மனது.


உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

என்னையும் உன்னையும்
காலம் வந்து பிரித்தது.
எனக்குள் இருக்கும் உன்னை
யார் வந்து பிரிப்பார்?


எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்.

விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.

நிற்காமல் வருகிற விக்கலைப் போல
மீண்டும் மீண்டும் உன்னிடம் வருகிறேன்.
வருவது போல வராமல் போகிற தும்மலாய்
என்னைவிட்டுப் போகிறாய்.

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?

உன் முகவரி கேட்பவரிடம்
என் இதயத்தை காட்டு!
என் முகவரி கேட்பவரிடம்
உன் இதயத்தை…???


யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ உளரே அவர்.

என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?

என் இதயவீட்டில்
உன்னைக் குடிவைத்துவிட்டு
உன் மனவாசலில்
காத்திருக்கிறேன்
.

தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத் தோவா வரல்.

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.

என் உயிரை
நழுவாமல் இறுக்கிப் பிடித்திருக்கிறது
உன் நினைவுக் கயிறு.

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்.

நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?

நினைத்துக் கொண்டிருந்தால்
உன்னிடமே போகிறது மனமும்…
மறக்க நினைத்தால்
என்னைவிட்டே போகிறது உயிரும்…
விலகிய பிறகு, உன்னை
நினைப்பதா? மறப்பதா?


மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

பேசவேண்டாமென்று சொன்னதைப் போல
உன்னை நினைக்கக்கூடாதென்றும் சொல்லிவிடாதே.
காதல்தான் இல்லை, உயிராவது மிஞ்சட்டும்!


எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?

உன்னையும் என்னையும்
பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை
என்றவள் பிரிந்தே போய்விட்டாய்…
என்னை விட்டு உன்னோடு வந்து
கொண்டிருக்கிறது
என் மனமும், உயிரும்!


விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

“நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்.” எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

உன்னைப் பார்க்கும் ஆசையெல்லாம்
இந்த நிலவைப் பார்த்துத்
தீர்த்துக் கொள்கிறேன்
பௌர்ணமியன்று மட்டும்!


விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.

கனவுநிலை உரைத்தல் - காதல் பூக்கும் மாதம் - 130

13. கனவுநிலை உரைத்தல்

கனவிலும் முத்தங்களைக்
கொடுத்து என்னைக்
கடனாளியாக்குகிறாய்!



காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.

வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?


நேரில் தான் உன்னோடு பேசமுடிவதில்லை.
கனவில் உன்னைக் கண்டாலாவது
உயிரோடிருப்பதைச் சொல்லலாம் என்றால்
உறங்காமல் அடம்பிடிக்கிறதே
இந்தக் கண்கள்!

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்.

நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.


கனவில் மட்டும்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
உன்னையங்கு காண்பதால்!



நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.


இனிமையானக் கனவெல்லாம்
நனவாகி விட்டு…
கொடுமையான நனவெல்லாம்
அதில் வரும்
கனவாகி விட்டாலென்ன?


கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.


வருகிற வரை புரிவதில்லை
காதலென்று!
கலைகிற வரை தெரிவதில்லை
அதுவும் கனவென்று!



நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!


மெல்ல உன் விரல் பிடித்து
செல்லமாய் சில சொடுக்கெடுத்து
மெதுவாய்க் கூந்தல் கோதி
நெற்றியில் முத்தமிட நெருங்குகையில்
கலைகிறது…கனவு!



நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்.

நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.


நனவில் வராமல் கொல்கிறாய்.
கனவில் வந்து கொல்கிறாய்.

நானவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?


நான் தூங்கும்போது
கனவில் நெருங்கி வந்து
தோள் சாய்ந்தவள்
விழித்துப் பார்த்தால் காணவில்லை…
வழியெங்கும் தேடினால்…
நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறாய்
என் இதயமெத்தையில்!



துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து.

தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.


கனவு மட்டும் இல்லையென்றால்
உன்னைக் காண்பது
கனவாகவேப் போயிருக்கும்!



நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்.

கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.


நாம் பிரிந்துவிட்டோமென்று
சொல்கிறவர்க்கெல்லாம்
கனவு காணும் பழக்கமில்லையோ?


நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்.

என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?

பொழுதுகண்டு இரங்கல் - காதல் பூக்கும் மாதம் - 140

14. பொழுதுகண்டு இரங்கல்

உன்னை நினைக்கவைத்தே
என்னைக் கொல்கிறதே!
இது மாலையல்ல…
என் மரணத்தில் விழும் மாலை!



மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!


அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்கிறதே…
என்னைப் போல காதலியைப் பிரிந்துவருந்துகிறதா?
இந்த மாலைப் பொழுது.


புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
மயங்கும்மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?

உன்னோடு இருந்த காலங்களில்
பூனையைப் போல இருந்த மாலைப் பொழுது
நீ போன பின் புலியாய்ப் பாய்ந்து கொல்கிறது!


பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.
பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.

நீயில்லாத போது
மாலை அழகாய் வருவதில்லை…
மலையளவு துயராய் வருகிறது!



காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

புலரும்போதெல்லாம் காதலோடு மலரவைத்துவிட்டு
சாயும்போது மட்டும், உன்னைக் காணாத துயரில்
என்னை சாய்த்துவிட்டே சாய்கிறது
இந்தப் பொழுது!



காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் “காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?” என்று புலம்புகிறது.

மாலைப் பொழுது…
இனிதிலும் இனிது – உன்னோடு இருந்தால்!
கொடிதிலும் கொடிது – நீயில்லையென்றால்!



மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

காலையில் அரும்பி
பகலில் மொட்டாகி
மாலையில் மலர்கின்றன
என் காதல் துயரங்கள்!


காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.


நீ இருந்தால்
இரவின் இடிகளும் எனக்கு இன்னிசை…
நீ பிரிந்தால்
மாலையின் மெல்லிசையும் எனக்கு
கொல்லிசை!



அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.


இந்த மாலைப் பொழுது
என்னை மயக்கவே செய்கிறது…
நீயிருந்தாலும், பிரிந்தாலும்!



பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.


நீ வருவாயென
நான் தேக்கி தேக்கி வைத்தாலும்,
என்னுயிரை கரைத்துக் கொண்டே இருக்கிறது…
இந்த மாலைப் பொழுது!


பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர்.
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

*******************************************
§§§§§§§§§§§§s.s.raj§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
*******************************************

15. உறுப்புநலன் அழிதல்


என் கண்கள் – மலர்கள்.
உன் கண்கள் – வண்டுகள்.
தேக்கி வைத்த தேனெல்லாம்
கண்ணீராய் வீணாகிறது!

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.


கண்ணீரும் ஒரு நாள் வற்றிப் போய்
செந்நீர் உதிர்க்கப் போகிறது
என் கண்கள்!


நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.


ஓராண்டாய் ஏற்றி வைத்த உடம்பும்
உன்னைப் பிரிந்த ஒரு நாளில்
இளைத்துப் போனது!


தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.

உறுப்பு நலன் அழிதல் - காதல் பூக்கும் மாதம் - 150

15. உறுப்பு நலன் அழிதல்

வளையல் கழன்று விழுமளவுக்கு
இளைத்துப் போனதாய் சொல்கிறாய்
உன் வளையலில் நுழையுமளவுக்கு
நான் இளைத்ததை யாரிடம் சொல்ல?

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.

உன் அழகை அழிக்கிறது…
எனக்கு அழுகையை அளிக்கிறது…
நம் பிரிவு!



கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.

உன்னை நினைத்தே
இளைத்துப் போகிறது உடல்…
உன்னால்தான் இளைக்கிறேனென உலகம் பேச
களைத்துப் போகிறது மனமும்!



தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
கொடியார் எனக்கூறல் நொந்து.
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.


என் வருத்தங்களை எல்லாம்
உன்னிடம் சொல்ல
வாய் வந்தால் மனம் தடுக்கிறது..
மனம் வந்தால் சொல் மறுக்கிறது!


பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?

எல்லோருக்கும் முன்னும்
என் கைகோர்த்தே நடக்கிறாய்…
கூச்சத்தில் நானும் கைகளையெடுத்தால்
அழ ஆரம்பித்து விடுகிறாய்.



முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.

காற்று கூட
நம்மைப் பிரிக்கப் பார்க்கிறதென அழுகிறாய்.
வா! காற்றில்லாத கனவுலகம் ஓடிப் போகலாம்!



முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.

என் கன்னங்களில்
முத்தங்களாய் வழிந்தவள்
கண்ணீராய் வழிகிறாய்



கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

நெஞ்சொடு கிளத்தல் - காதல் பூக்கும் மாதம் - 160

16. நெஞ்சொடு கிளத்தல்

காதல் நோய்க்கு
காரணம் யாரெனக் கேட்டால்
உன்னைக் காட்டியது…
மருந்து என்னவென்று கேட்டாலும்
உன்னையேக் காட்டுகிறது
உன்னைப் போல தான் குறும்பு செய்கிறது
இந்த மனமும்!


நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து.

எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?

உன்னை எதிர்பார்த்து,
காற்றிருக்கும் வரை
காத்திருக்கும்…
இந்த மனம்!


காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு.

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.

என் கவிதைகள்
எதனையும் வாசிக்காமல்
உன்னையே யாசித்துக் கொண்டிருக்கிறது
என் காதல்!

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?
தங்களை விட்டுவிட்டு
உன்னோடு போய்விட்டதாம்…
மனதிடம் சண்டையிடுகின்றன
கண்கள்!


கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.

‘உன்’ , ‘என்’ என்பன போய்
‘நம்’ ஆனதால்…
உன்னையே நம்மையே
நினைத்திருக்கிறது என் நம் மனம்!


செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?


உன்னை நோக்கி வரும்
என் சின்னக் கோபங்களும்
உன் புன்னகையைப் பார்த்ததும்
மன்னிப்போடு மண்டியிடுகின்றன!

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.

நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?

இந்த மனமும்
உன்னைப் பற்றியே
புலம்பிக் கொண்டிருந்தால்…
என்னைப் பற்றி
நான் யாரிடம் புலம்ப?



காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு.

நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.

“பிரிந்து விட்டாள்”, “பிரிந்து விட்டாள்” என்று புலம்பிக் கொண்டே
உன் பின்னேப் போய்க் கொண்டிருக்கிறதே இந்த இதயம்…
இனியெப்படி நான் வாழ்வது?

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.

நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.

உன்னைத் தொலைத்து விட்டு,
இப்போது உன்னைத் தேடியே
நானும் தொலைந்து போகிறேன்.


உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?


என் எடையும்
உன் எடைக்கு சமமாகி விட்டது!
மனதில் உன்னை சுமக்கும் போதும்…



துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.

நிறையழிதல் - காதல் பூக்கும் மாதம் - 170

17. நிறையழிதல்

நீயிருந்தவரை உனக்கு அடங்கிக் கிடந்துவிட்டு
நீ பிரிந்ததும் என்னையே அடக்குகிறது
காதல்.


காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.

நள்ளிரவிலும் விழித்தெழிந்து
கண் கசக்கினால்
நீ தான் தெரிகிறாய்.


காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.

காதலும் தும்மலும்
ஒன்றுதான் என்றேன்.
ஒரு முறை தும்மிவிட்டு
விலகி விட்டாய்.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.

இலை மறை காயாக இருந்துவிட்டு
இப்போது பறவை கொத்தும் கனியாகிவிட்டது
நம் காதல்!


நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்.

மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.

அடித்துவிட்டு ஓடுகிற குழந்தையைத்
திருப்பியா அடிக்கிறோம்?
ஒரு முத்தம்தானே கொடுக்கிறோம்?
நீ – குழந்தை.
என் காதல் – முத்தம்.



செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று.

தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.

நீ விலகியதும்
உன்னிடமிருந்து என்னிடம் ஓடி வருகிறது காதல்.
என்னிடமிருந்து உன்னிடம் ஓடிப் போகிறது என் இதயம்!


செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.
‘முத்தமிடுகையில்
இதழ்களைத் திறக்கிறாய்…ஆனால்
கண்களை மூடிக் கொள்கிறாய்’
என்று சொன்னதுதான் தாமதம்…
கண்களையும் அகலத் திறந்து
ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
முகத்தையே மூடிக் கொண்டாய்!


நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.


“என்னிடம் என்ன பிடித்திருக்கிறது” என்றாய்.
“உன்னிடம் எதுவும் பிடிக்கவில்லை” என்றேன்.
திரும்பிக் கொண்டாய்.
“மொத்தமாய் உன்னையேப் பிடித்த பிறகு
உன்னிடம் எது பிடிக்கிறதென தனியாக எப்படி
சொல்ல?”



பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?


கழுத்தைப் பிடித்து
சண்டையிட வந்தவன்
உன்னைப் பார்த்ததும்
கட்டிப்பிடிக்கிறேன்…
உன் வெட்கத்தை!

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.

நீ விலகியதால்
காட்டுத்தீயாய் எரிந்து கொண்டிருந்த என் கோபம்
உன்னுடைய ஒரு துளி கண்ணீரில் அணைந்தது.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?

அவர்வயின் விதும்பல் - காதல் பூக்கும் மாதம் - 180

18. அவர்வயின் விதும்பல்

உன்னையே எதிர்பார்த்து
என் கண்ணெறிந்த கனலால்
வீதியில் தீ.

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.

என் மனதுக்குத் தெரியாமல்
உன்னை நானும் மெதுவாய் விலக்க…
விலகிப் போகிறது என் உயிர்.
வேகமாய் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறேன்…
உன்னையும், என்னுயிரையும்!


இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

நீ வரும் வரை
நுழையக்கூடாதென உத்தரவிட்டிருக்கிறேன்.
என் வீட்டு வாசலில்
மன்றாடிக் கொண்டிருக்கும்
மரணத்திடம்
!


உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

உள்ளேயிருந்தால் உன் வருகையைப்
பார்க்க முடியாமல் போய்விடுமாம்.
மேலே வந்து
கண்வழியே எட்டி எட்டி பார்க்கிறது
என் இதயம்.



கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.

கருப்பு வெள்ளையாய்
இருக்கும் என் கண்களும்
உனைக் கண்டால்
வண்ணங்களாய்ப் பூக்கும்!


காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு.

கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.

நீண்ட பிரிவுக்குப் பிறகு சந்தித்ததும்,
கட்டிப் பிடித்து முத்த மழை பொழிகிறாள்.
“எங்கிட்ட பேசவே மாட்டேன்னு சொன்ன?” என்று கேட்டால்
“பேச மாட்டேன்னு தான சொன்னேன்” என்று
சுவரில் எழுதிக் காட்டுகிறாளே… இவளை என்ன செய்ய?
என் பங்குக்கு நானும் கொஞ்(சு)சம் முத்தமிடுவதைத் தவிர…


வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.

பிரிந்தவர் கூடும்பொழுது
வார்த்தை கை விடுமாம்…
சரி விடு!
முத்தம் கை கொடுக்கும்!



புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்.

கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.

வெற்றி பெற்று
உன்னிடம் வாழ்த்துப் பெறுவது இன்பம்தான்!
ஆனாலும் தோற்கும்போதெல்லாம்
ஆதரவாய் நீ தலை கோதுகிறாயே…
அந்த சுகத்துக்கே
எல்லாவற்றிலும் தோற்றுப் போகலாம்!


வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.

நாம் சேர்ந்திருந்த பொழுதுகளில்
நொடிமுள் வேகத்தில் மணிமுள்ளும்
பிரிந்திருக்கும் பொழுதுகளில்
மணிமுள் வேகத்தில் நொடிமுள்ளும் சுற்றுகின்றன.
இந்த கடிகாரத்தைப் பழுது பார்க்க வேண்டும்!


ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.

தூக்கத்திலும்
தூக்கிக் கொஞ்சுகிறேன்
நீ தரும் துயரங்களை!



பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

குறிப்பறிவுறுத்தல் - காதல் பூக்கும் மாதம் - 190

19. குறிப்பறிவுறுத்தல்

எல்லாவற்றையும் பங்கிடுவோம் என்றாய்.
நான் காதலைக் கொண்டு வந்தேன்.
நீ பிரிவைக் கொண்டு வந்தாய்.
கொண்டு வந்த பிரிவை என்னிடம் கொடுத்து விட்டு,
காதலை மட்டும் நீ வாங்கிக் கொள்ளவே வில்லை!


கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

நீ பேரழகி என்று நான் பிதற்றுவதெல்லாம் பொய்தான்.
ஆனால் அதைக் கேட்டதும் வெட்கப்படுகிறாயே
அப்போதே அது உண்மையாகி விடுகிறது.


கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

நீ கலந்து கொள்ளும் அழகிப் போட்டியில் மட்டும்
போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்
உன்னை
!

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.

மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

நீ சிரிக்கும் போதெல்லாம்
வழுக்கி வழுக்கி விழுகிறேன்
உன் கன்னக் குழியில்.


முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

என் ஆயுள் முழுவதுக்குமான
ஆனந்தம் முழுவதும் ஒளிந்திருக்கிறது
உன் அரை நொடிச் சிரிப்பில்!

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

“மீண்டும் சந்தித்தால்
கட்டிப் பிடிப்பாயா?” என்றால்,
“ம்ம்ம்… மீண்டும் பிரியாமலிருக்க
பிடித்துக் கட்டுவேன்” என்கிறாள்.
இவளைக் கட்டிப் பிடித்துக் கட்ட வேண்டும்
காதலால்!


பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

நீண்டப் பிரிவுக்குப் பிறகு என்னைக் கண்டதும்,
உன்னை விட்டுப் பிரியப் போகிற கவலை…
உன் ஆடைகளுக்கு!


தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!

“என்னைப் பிரிந்திருந்த போது எப்படி உணர்ந்தாய்?” என்றவளிடம்
“சொர்க்கத்தில் இருந்ததைப் போல” என்றதும் அழுகிறாள்.
உயிர் போனால்தான் சொர்க்கத்துக்குப் போக முடியும் என்பது
இவளுக்குத் தெரியாதோ?


நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

நீ சிகப்பாம்.
நான் கருப்பாம்.
கேலி பேசுகிறார்கள்.
உன்னையேத் தொடரும்
உன் நிழல் பின் எப்படியிருக்கும்?


தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.
“பிரிந்து விடு! பிரிந்து விடு!”
என்று ஆயிரம் வார்த்தைகளில் சொல்லிவிட்டு
ஒற்றைப் பார்வையில் உயிர் போகக் கெஞ்சுகிறாளே
இவளை விட்டு எப்படிப் பிரிய?


பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

புணர்ச்சி விதும்பல் - காதல் பூக்கும் மாதம் - 200

20. புணர்ச்சி விதும்பல்

“உன்னை எனக்குப் பெயர் வைக்க சொன்னால்
என்ன பெயர் வைப்பாய்?” என்று கேட்பவளிடம்,
‘மதுமதி’ என்றேன்.
போதை தரும் நிலவுக்கு
வேறென்ன பெயர் வைக்க முடியும்?


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

மெதுவாய் அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.

உன் காதலின் முன்னே போட்டியிட முடியாமல்
உன்னிடம் சரணடைகின்றன
என் சின்னக் கோபங்கள்!


தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

“உன்னோடுப் பேச மாட்டேன்” என்று சொல்லி விட்டு
கண்களால் இத்தனைக் காவியம் வடிப்பதற்கு பதில்
நீ வாயைத் திறந்தே பேசி விடலாம்!


பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

நீ என்னோடு கா(ய்) விட்டுப்
பேசாமல் இருக்கும் பொழுதுகளில்
மேலும் கனிந்து விடுகிறது
என் காதல்.


ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு.

ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.

என்னைப் பிரிந்து விட்டதற்காக நீயும்
உன்னைப் பிரிய விட்டதற்காக நானும்
வருத்தப் பட்டுக் கொண்டிருக்கையில்…
அமைதியாக நம்மை சேர்த்து வைக்கிறது
நம் காதல்!

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து.

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.

நீ விலகியதில்
என் காதலுக்கு உன் மேல் வருத்தம்!
மீண்டும் நீ வந்ததும்
அத்தனை வருத்தங்களும் அரைநொடியில் மாறிப் போயின…
அழகானக் காதலாய்!

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

உன்னோடு
நான் போடும் சண்டையெல்லாம்
உன்னிடம் தோற்பதற்கே!


உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?

பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
எந்தக் காரணமும் சொல்லாமல்
என் மார்பில் முகம் புதைத்து
நீ வடித்தக் கண்ணீரில்
மேலும் சுத்தமாகிறது என் காதல்!


இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.

இப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்காதே
என் காதல் மிக மிக மென்மையானது
உன்னைப் போல!

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.

பார்வையில் கோபத்தீ மூட்டுகிறாள்.
மன்னிப்பு கேட்க நெருங்கினால்..
கட்டியணைத்துக் காதல் தீ மூட்டுகிறாள்!


கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்

புதன், 25 ஆகஸ்ட், 2010

நட்பும் கூட

காதல் கிடைக்காதவர்களும்
காதலில் தோற்றவர்களும்
ஏனோ
...இந்த காதலை அசிங்கபடுத்துகிறார்கள்.....

உண்மையில்
ஒரு நொடி காதல் என்றாலும்
அதன் சுகம் தனி தான் ...
காதல் திருமணத்தில் முடிந்தால் தான்
உண்மை காதல் என்கிறார்கள்......

அப்படி என்றால்
உண்மையாய் திருமணதிற்கு பின்
காதல் செய்பவர்கள்
எத்தனை பேர் ?....

காதல்...
காதல் தான் ....
சேர்ந்தாலும்...
சேராமல் போனாலும்
சுகமானது தான்
உண்மை காதல் ...

காதலை விட
நட்பை சிலர் பெரிதென்கிறார்கள்...
அவர்களுக்கு தெரியவில்லை
நட்பும் கூட
ஒரு வகை காதல் என்பது.....

அழகான காதல்

நீ விலகியதில்
என் காதலுக்கு உன் மேல் வருத்தம்!
மீண்டும் நீ வந்ததும்
அத்தனை வருத்தங்களும் அரைநொடியில் மாறிப் போயின…
அழகானக் காதலாய்!
(((((((((((சாம் )))))))))

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

என் தோழி உனக்காக

நித்தி உன் நட்பை எந்த அளவு
நேசிக்கிறேன்
என்று எனக்கு சொல்ல
தெரியாது...
ஆனால் ...
உன் நட்பை
நேசிக்கும்
அளவுக்கு என் காதலியை நேசிக்கவில்லை என்பதே உண்மை .......
சாம் ..

என் அக்காவுக்கு

மாற்றம் நிறைந்த
இந்த உலகத்தில்
மாற்றமே இல்லாமல்
வாழ்ந்திட ஆசை
என்றும் நான் ...
உன் தம்பியாக..
நீ என் அக்காவாக ......
பாசத்துடன் சாம் ,............!

நமக்காக காத்திருக்கும்

சூரியனுக்காக காத்திருக்கும் சூரியகாந்தி ......
நிலவுக்காக காத்திருக்கும் அல்லி....
அசைதலுக்கு காத்திருக்கும் மரம்...
மழைக்காக காத்திருக்கும் நிலம்..
உன் நட்பிற்கு காத்திருக்கும் நான்..
நமக்காக காத்திருக்கும் நட்பு...
நட்புடன் சாம் ...........

பசப்புறு பருவரல் - காதல் பூக்கும் மாதம் - 100

10. பசப்பு உறு பருவரல்

உன்னிடம் பகிர்ந்தால்
எல்லாத் துயரங்களும் பாதியானது.
பிரிவுத் துயரம் மட்டும் இரட்டிப்பாகிறது.


நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற.

என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?

உன் பிரிவு தரும் துக்கமும்
உடலைத் தாண்டி உயிர் வரைப் பரவுகிறது…
உன் முத்தங்களைப் போல!


அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!

நீ பார்க்காமல்
நானெப்படி அழகாவேன்?
உன்னைப் பார்க்காமல்
எனக்கெப்படி வரும் வெட்கம்?
எப்போது உன்னைப் பிரிவேன் எனக்
காத்திருந்து தாக்குகிறது காதல் நோய்.


சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.


என் மனமும் உதடும்
முணுமுணுப்பது உன்னை மட்டும்தானே?
எனக்கேத் தெரியாமல் எப்படி வந்தது பசலை?


உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?


இடுப்பில் இருந்து
இறக்கிவிடமுடியாதக் குழந்தையைப் போல
உன்னையேத் தொற்றிக்கொண்டிருக்கிறது
என் மனம்.


உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது.

என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.


விடைபெறும் கடைசி தருணம்
என்விரல் விட்டு உன் விரல் பிரியும்
இறுதி நொடியில்
பௌர்ணமி அமாவாசையானது போல
அழிந்துபோனது என் அழகெல்லாம்!


விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.


‘தூக்கத்திலும் கூட
என்னைக் கட்டிக் கொண்டே தூங்குவதேன்?’ என்கிறாய்.
ஒருவேளை கனவில் என்னைப் பிரிந்து விட்டால்?


புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!


என் அழகு குறைந்து கொண்டே வருகிறதென
கண்ணாடி கூட பழிக்கிறது!
அதற்கெப்படிப் புரியும்?
என்னழகுக்குக் காரணம் நீயென!



பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்.

இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே.


என் பிரிவுதான்
உன் பிரியமெனில்
தாராளமாக
என்னைப் பிரி!
என்னுயிர் உரி…



பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!


நீ நலம் என்றால்
நானும் நலம்.
நீ நலமில்லையென்றால்
நானே இல்லை!


பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!

கண் விதுப்பழிதல் - காதல் பூக்கும் மாதம் - 90

9. கண் விதுப்பழிதல்

உன்னை எனக்குக் காட்டியதால்
கோடிமுறை நன்றி சொல்லியிருப்பேன் என் கண்களுக்கு…
நீ பிரிந்ததும் என்னைக் காண மனமில்லாமல் அவை
கண்ணீரால் தம் முகம் மறைக்கின்றன!


கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது.

தீராத இக்காமநோய் கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க காட்டிய கண்கள் தாமே இப்போது அழுவது ஏன்?

காதலில்
கண் பேசியதெல்லாம்
மனதுக்குப் புரிந்தது.
பிரிவில்
மனம் சொல்வதெதுவும்
அழுகிறக் கண்ணுக்குப் புரிவதில்லை.

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைத லுழப்ப தெவன்.

ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்புகொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?


உன் தரிசனத்துக்காக
என்னை உன்பின்னே அலையவிட்டவை,
இன்று உன்னைப் பார்க்க முடியாமல்
ஒளிந்து கொள்ள வைக்கின்றன!
புரிந்துகொள்ளவே முடியவில்லை
என் கண்களையும்,
பிரிந்து போன உன்னையும்!


கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்துநோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

என்னை விட்டுப் போவதென முடிவெடுத்தபின்
என் காதலைப் போல
என் கண்களையும் கொன்று விட்டுப் போ!
அல்லது
வற்றாத கண்ணீரைத் தந்து விட்டுப் போ!


பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா
உய்வினோ யென்கண் நிறுத்து.

என் கண்கள் தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

என் காதல் கடலை விடப் பெரியது.
உன் பிரிவால் வழியும் கண்ணீர்க்கடலோ
என் காதலைவிடப் பெரியது.


படலாற்றா பைதல் லுழக்குங் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண்.

அன்று கடலும் தாங்கமுடியாத காம்நோயை உண்டாக்கிய என் கண்கள் இன்று உறங்கமுடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

உன்னைக்
காதலில் நனைத்தேன்.
நீயோ பிரிந்துவிட்டு
என் கண்களை நனைக்கிறாய்…


ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்
தாஅ மிதற்பட் டது.

எமக்கு இந்தக் காமநோயை உண்டாக்கிய கண்கள் தாமும் இத்தகைய துன்பத்தைப் பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

உன் பிரிவால்
அழுதழுது என் கண்ணீர்
வற்றிப் போனாலும்,
சுரந்துகொண்டே இருக்கிறது…
உன் மீதானக் காதல்!



உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண்.

அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

நீ காதலை வைத்தது
உள்ளத்திலோ உதட்டிலோ தெரியவில்லை.
ஆனால் விலகும்போது
கடலை வைத்துவிட்டுப் போகிறாய்
என் கண்ணில்!

பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்.

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார். அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

பாவம் என் கண்கள்.
நீ தூங்கவே விடுவதில்லை…
காதலித்த போதும், பிரிந்தபிறகும்!


வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா ஆயிடை
யாரஞ ருற்றன கண்.

காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

உன்னிடம்
என் காதலைக் காட்டிக் கொடுத்ததும்,
உன் பிரிவை ஊருக்கெல்லாம்
அழுதேக் காட்டிக் கொடுக்கப் போவதும்,
என் கண்கள்தாம்!


மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ
லறைபறை கண்ணா ரகத்து.

அறையப் படும் பறபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் உரார்க்கு அரிது அன்று.

படர் மெலிந்து இரங்கல் - காதல் பூக்கும் மாதம் - 80

8.படர் மெலிந்து இரங்கல்

எப்படித்தான் இருகையால்
பொத்திவைத்தாலும்
விரலிடுக்கில் வழிகிற நீரைப் போல
வெளிவந்துவிடுகிறது.
என் காதல்!


மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

இக்காமநோயைப் பிறர் அறியாமல் யான்மறைப்பேன்; ஆனால், இது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுவது போல் மிகுகின்றது.


உன்னைப் பார்த்து முதன்முதலாய்
வெட்கம் வந்தபோது
காதல் வந்ததை உணர்ந்தேன்!
உன்னிடம் காதலைச் சொல்ல வந்தாலோ
மறுபடி வெட்கம்தானடா வருகிறது!


கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்.

இக்காதல் நோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை. நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.


காதலும் நாணமும்
இரட்டைக் குழந்தைகளா?

காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா வுடம்பி னகத்து.

துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருபக்கமும் தொங்குகின்றன


கடலைக் கரையில் இருந்து வேடிக்கை பார்க்கும் சிறுவனைப் போல
காதலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
முழுவதுமாய் உள்ளிழுத்துக் கொண்டு சிரிக்கிறாய்.

காமக்கடல் மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில்.

காமநோயாகிய கடல் இருக்கின்றது; ஆனால் அதை நீந்திக் கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.


இன்பத்துள் இன்பமா?
துன்பத்துள் துன்பமா?
காதல்.

துப்பி லெவன்செய்வார் கொல்லோ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்.

இன்பமான நட்பிலேயே துயரத்தி வரச்செய்ய வல்லவர், துன்பம் தரும் பகையை வெல்லும் வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?


காதலின்பம் – மலை.
பிரிவுத்துயர் – கடல்.
அதிகமெது,
உயரமா? ஆழமா?


இன்பங் கடலற்றுக் காமமற் றஃதடுங்கால்
துன்ப மதனிற் பெரிது.

காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

காதல் – கடல்.
நீந்தினால் கரையேரலாம்.
பிரிவு – கரையில்லாத கடல்.
நீந்தலாம்…அவ்வளவுதான்!



காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன்.

காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.


நான் துணைதான்!
பரிவில் உனக்கும்…
பிரிவில் இரவுக்கும்…


மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா
வென்னல்ல தில்லை துணை.

இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமலிருக்கின்றது.


கூடிக்களித்த பொழுதுகளில் ஓடிப்போகிறது.
நரக வேதனையில் நானிருக்க
நகர மறுக்கிறது.
உன்னைவிடக் கொடுமையானது இந்த இரவு.


கொடியார் கொடுமையில் தாங்கொடிய விந்நாள்
நெடிய கழியு மிரா.

பிரிந்து துன்புறுகின்ற இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையைவிடத் தாம் கொடியவை.


என் இதயத்தைப் போல
உன் கூடவேப் போயிருந்தால்
என்னிடமிருந்து அழவேண்டிய பாவமில்லை
இந்தக் கண்களுக்கு.


உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்.

காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல செல்ல முடியுமானால் என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

பிரிவாற்றாமை - காதல் பூக்கும் மாதம் - 70

7.பிரிவாற்றாமை

உன்னைவிட்டுப் பிரிந்தாலும்
உன் நினைவுகளை எடுத்துச் செல்கிறேன்’ என்கிறாய்.
இந்தா என் உயிரையும் எடுத்துசெல்.


செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல்.


என்னை எப்பொழுது பார்ப்பாயென
காதலில் ஏங்கித் தவித்தக் கண்கொண்டு
உன்னை எப்படிப் பார்ப்பேன்?
பிரியப் போகிறாயெனத் தெரிந்தபின்…


இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத்தாற் புணர்வு.

அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது. இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.


பிரியமாய் இருப்பதால்தான்
பிரியாமல் இருப்பாயென
நம்பி ஏமாறுகிறதோ மனது?



அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ளபடியால், அவர் ‘பிரியேன்’ என்று சொல்லும் உறுதிமொழியை நம்பித் தெளிவது அரிது.


நீஅஞ்சாமல்,
உலகுக்கு அஞ்சிப் பிரிந்துவிட்டாய்.
நானோ துயருக்குத் தோழமையாகிறேன்.
காதலுக்கு துரோகியாகிறேன்.
பிரிவுக்கு

அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
றேறியார்க் குண்டோ தவறு.

அருள் மிகுந்தவராய் ‘அஞ்ச வேண்டா’ என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதி மொழியை நம்பித் தெளிந்தவர்க்குக் குற்றம் உண்டோ?


ரசித்து ரசித்து காதலிப்பது எப்படியென
தெரிந்த மனதுக்கு
பிரியாமல் உன்னைக் காப்பது எப்படியென
தெரியாமல் போனது!

ஓம்பி னமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கி னரிதாற் புணர்வு.

காத்துக் கொள்வதனால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும்; அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.


பிரிந்துவிடலாமா எனக்கேட்கத் துணிந்த
உன் கல் நெஞ்சில் மறுபடியும்
என்ன சுரக்குமெனக் காத்திருக்கிருக்கிறேன்?
காதல் நீரா? கானல் நீரா?


பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர்
நல்குவ ரென்னு நசை.

பிரிவைப் பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால், அத்தகையவர் திரும்பி வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.


உடலில் குறையும் எடையைத்தான்
உள்ளத்தில் சுமையாகக் கூட்டுகிறதா
உன் பிரிவு?



துறைவன் றுறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை.

என் மெலிவால் முன்கையில் இறைகடந்து சுழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ?


என் உறவுகளைப் பிரிவது
உயிரேப் போவதுபோல..
உன்னைப் பிரிவதோ அதற்குமேலே…
அதை எப்படி சொல்ல?


இன்னாது இனனில்லூர் வாழ்த லதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு.

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது; இனிய காதலரின் பிரிவு அதைவிடத் துன்பமானது.


தொட்டபோதெல்லாம் சில்லென இருந்துவிட்டு
விலகியபின்தான் எரிக்குதடி காதல் தீ!


தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ.

நெருப்பு தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காம்நோய்போல் தன்னை விட்டு நீங்கியபொழுது சுடவல்லதாகுமோ?


உன்னைப் பிரிந்தபின்
நானும் கூட வாழ்ந்திருப்பேன்
உயிருள்ளப் பிணமாய்!


அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.

பிரியமுடியாத பிரிவிற்கு உடன்பட்டு ( பிரியும்போது ) துன்பத்தால் கலங்குவதையும் விட்டு, பிரிந்தபின் பொறுத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.

அலர் அறிவுறுத்தல் - காதல் பூக்கும் மாதம் - 60

6. அலர் அறிவுறுத்தல்


உனக்கென் காதல்
புரியவில்லையென்று போகத்துடித்தாலும்,
உனக்கும் எனக்கும்
‘ஏதோ’ இருக்கிறது என்று ஊர் பேசுகிறதே…
அந்த சுகத்துக்காகதான் போகாமல்
ஏதோ இருக்கிறது… என் உயிரும்!



அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

எம் காதலைப் பற்றி அலர் எழுவதால் அரிய உயிர் போகாமல் நிற்கின்றது; எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும் அறியாமலிருக்கின்றனர்.


நம்மிருவரையும் தொடர்புபடுத்தி
கேலி பேசும் நண்பர்க்கெல்லாம் தெரியுமா?
அதுதான் நம் காதல் வளர உதவுகிறதென!




மலரன்ன கண்ணா ளருமை யறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்.

மலர்போன்ற கண்ண உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

நீயெனக்குக் கிடைத்தது
வதந்தியாகப் பரவுகிறதென வருந்துகிறாய்.
பின்னே, வரம் கிடைத்தால் வதந்தி பரவாதா?


உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

ஊரார் எல்லாரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ? (பொருந்தும்). அந்த அலர் பெறமுடியாமலிருந்த பெற்றாற்போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது

நம் காதல் எல்லோருக்கும் தெரிந்து விட்டதே என வாடுகிறாய்.
இனிக் கவலையில்லையென
குதிக்கிறது காதல்.


கவ்வயாற் கவ்விது காம மதுவின்றேல்
தவ்வென்னுந் தன்மை யிழந்து.

எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று; அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருக்கிப் போய்விடும்.

கொஞ்சம் கொஞ்சமாய்ப்
போதையேற்றிக் கொ(ள்/ல்)கிறதே!
இது கள்ளா? காதலா?


களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் மினிது

காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

உன்னை ஒருமுறைச் சந்தித்ததற்கே
நிலவைத் தொட்டவனைப் போல
ஊருக்குள் எனக்குப் பெருமை!


கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொன் டற்ற.

காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்டசெதி போல் எங்கும் பரந்துவிட்டது.

ஊரார்ப் பேச்சில் எருவுண்டு
தாயின் வசையில் நீர்குடித்து
பயந்து பயந்து பூக்கிறது உன் காதல்.


ஊரவர் கௌவை யெருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.

இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

நம்மை சேர்த்து வைத்துப் பேசியேப்
பிரிக்கப் பார்க்கிறது உலகம்.
நெய்யூற்றியா அணையும் நெருப்பு?


நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காமம் நுதுப்பே மெனல்.

அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

வெட்கம் கெட்டுப் பேசுமுலகம்.
அதற்கெல்லாம் நீ வெட்கப்படாதே!
வெட்கப் படுவதென்றால்
என்னிடம் மட்டும் வெட்கப்படு
!

அலர்நாண லொல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நான நன்ந்தக் கடை.

அஞ்சவேண்டா மென்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும் நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?

ஊருக்கேத் தெரிந்தபின்னும்
வீட்டில் சம்மதிக்கவில்லையென்றால்…
ஓடிப்போகலாமா என்கிறாய்.
என்னிடம் வண்டியிருக்கிறதென்கிறேன்.



தாம்வேண்டி நல்குவர் காதலர் யாம்வேண்டிற்
கௌவை யெடுத்ததிவ் வூர்.

யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர். அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

காதல் பூக்கும் மாதம் - 60

6. அலர் அறிவுறுத்தல்

காதல்
புரியவில்லையென்று போகத்துடித்தாலும்,
உனக்கும் எனக்கும்
‘ஏதோ’ இருக்கிறது என்று ஊர் பேசுகிறதே…
அந்த சுகத்துக்காகதான் போகாமல்
ஏதோ இருக்கிறது… என் உயிரும்!


அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

எம் காதலைப் பற்றி அலர் எழுவதால் அரிய உயிர் போகாமல் நிற்கின்றது; எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும் அறியாமலிருக்கின்றனர்.


நம்மிருவரையும் தொடர்புபடுத்தி
கேலி பேசும் நண்பர்க்கெல்லாம் தெரியுமா?
அதுதான் நம் காதல் வளர உதவுகிறதென!




மலரன்ன கண்ணா ளருமை யறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்.

மலர்போன்ற கண்ண உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

நீயெனக்குக் கிடைத்தது
வதந்தியாகப் பரவுகிறதென வருந்துகிறாய்.
பின்னே, வரம் கிடைத்தால் வதந்தி பரவாதா?


உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

ஊரார் எல்லாரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ? (பொருந்தும்). அந்த அலர் பெறமுடியாமலிருந்த பெற்றாற்போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது

நம் காதல் எல்லோருக்கும் தெரிந்து விட்டதே என வாடுகிறாய்.
இனிக் கவலையில்லையென
குதிக்கிறது காதல்.


கவ்வயாற் கவ்விது காம மதுவின்றேல்
தவ்வென்னுந் தன்மை யிழந்து.

எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று; அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருக்கிப் போய்விடும்.

கொஞ்சம் கொஞ்சமாய்ப்
போதையேற்றிக் கொ(ள்/ல்)கிறதே!
இது கள்ளா? காதலா?


களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் மினிது.

காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

உன்னை ஒருமுறைச் சந்தித்ததற்கே
நிலவைத் தொட்டவனைப் போல
ஊருக்குள் எனக்குப் பெருமை!




கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொன் டற்ற.

காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்டசெதி போல் எங்கும் பரந்துவிட்டது.

ஊரார்ப் பேச்சில் எருவுண்டு
தாயின் வசையில் நீர்குடித்து
பயந்து பயந்து பூக்கிறது உன் காதல்.




ஊரவர் கௌவை யெருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.

இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

நம்மை சேர்த்து வைத்துப் பேசியேப்
பிரிக்கப் பார்க்கிறது உலகம்.
நெய்யூற்றியா அணையும் நெருப்பு?



நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காமம் நுதுப்பே மெனல்.

அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

வெட்கம் கெட்டுப் பேசுமுலகம்.
அதற்கெல்லாம் நீ வெட்கப்படாதே!
வெட்கப் படுவதென்றால்
என்னிடம் மட்டும் வெட்கப்படு!



அலர்நாண லொல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நான நன்ந்தக் கடை.

அஞ்சவேண்டா மென்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும் நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?

ஊருக்கேத் தெரிந்தபின்னும்
வீட்டில் சம்மதிக்கவில்லையென்றால்…
ஓடிப்போகலாமா என்கிறாய்.
என்னிடம் வண்டியிருக்கிறதென்கிறேன்.



தாம்வேண்டி நல்குவர் காதலர் யாம்வேண்டிற்
கௌவை யெடுத்ததிவ் வூர்.

யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர். அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

காதல் பூக்கும் மாதம் - 50

5. காதல் சிறப்புரைத்தல்

பசும்பால் தருகிறாய். தேனும் தருகிறாய்.
“இரண்டும் கலந்து தா” என்றால்…
முத்தமிட்டு விட்டு ஓடுகிறாய்!



பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர், பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

என்னுயிரின் உருவம் நீ!
உன்னுயிரின் உருவம் நான்!
நம் காதலின் உருவம்?
வேறென்ன… குழந்தைதான்!


உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு.

இம்மடந்தையோடு என்னிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.


நீயென் கண்ணில் இருக்கிறாயென்றேன்.
எந்தக் கண்ணில்? என்கிறாய்.
அகக்கண்ணில்!


கருமணியுட் பாவாய்நீ போதாயாம் வீழுந்
திருநுதற் கில்லை யிடம்.

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடும்! யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!

நீ என்னைவிட்டுப் பிரிகிறபோதும்
கையற்ற நிலையில் நான்.
உயிர் பிரிவதற்கு சாட்சியாய்
உயிரே நிற்கிறது.


வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாதல்
அதற்கண்ணள் நீங்கு மிடத்து.

ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள்; பிரியும் போது உயிருக்குச் சாவு போன்றவள்.


உன்னை மறந்தால் மறுபடி நினைப்பேனா?
தெரியவில்லை…
எனக்குதான் உன்னை மறக்கவேத் தெரியாதே!

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
னொள்ளமர்க் கண்ணாள் குணம்.

போர் செய்யும் கண்களை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும்; ஆனால் ஒருபோதும் மறந்ததில்லையே!


என் கண்ணுள்ளிருக்கும் நீ
இமைக்கிற போது மட்டும் வருந்துகிறாய்…
என்னிமைக்கு வலிக்குமோ என!


கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்
நுண்ணியரெங் காத லவர்.

எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போகமாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்தமாட்டார்; அவர் அவ்வளவு நுட்பமானவர்.


மையிடுகிறாயா?
உன் கண்ணுள்ளிருக்கும் எனக்கு
வேலிபோடுகிறாயா?


கண்ணுள்ளார் காத லவ்ராகக் கண்ணும்
மெழுதேங் கரப்பாக் கறிந்து.

எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார். ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.


நீ சூடாக எதுவும் உண்பதில்லை.
உன்னுள் நான்!
நான் வெந்நீரில் குளிப்பதே இல்லை.
என் ஒவ்வோர் அணுவிலும்
நீ!

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட
லஞ்சுவதும் வேபாக் கறிந்து.

எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார்; ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.


உன் கண்ணுள்ளிருக்கும் நான் மறைகிறேனெனெ
இமைக்காமல் இருக்காதே.
உன்னைத் தூங்கவிடவில்லையென
உலகம் என்மேல் பழி சுமத்தும்.


இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே
யேதில ரென்னுமிவ் வூர்.

கண் இமைத்தால் காதலர் மறைந்துபோதலை அறிகின்றேன். அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.


உன்னைப் பிரிந்துவிட்டேனா?
வசிப்பதுதானடி இங்கே…
வாழ்வதெல்லாம் உன்னுள்ளே!


உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ
ரேதில ரென்னுமிவ் வூர்.
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார்; ஆனால் அதையறியாமல் பிரிந்து வாழ்கின்றார், ‘அன்பில்லாதவர்’ என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

காதல் பூக்கும் மாதம் - 40

4. நலம் புனைந்து உரைத்தல்

நீ தூங்க அனிச்சப்பூக்களைத் தூவினேன்,
கதறுகின்றனப் பூக்கள்…
உனக்கு வலிக்குமென!


நன்னீரை வாழி யனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்! நீ வாழ்க! யாம் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள்.

மொட்டுப் பூவாவதை
பார்க்க ஆசை.
மெதுவாக இமைகளைத் திற!


மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குன்றாய்!

மூங்கில் தோள்; மாந்தளிர் மேனி;
முத்துப் பல்; நறுமணம் வியர்வை ;கூர்வேல் கண்.
- இலக்கணப்படி உவமை.
காதல்படி உண்மை.

முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி; முத்தே பல்; இயற்கை மணமே மணம்; வேலே மையுண்ட கண்.

பூங்காப் பக்கம் செல்லாதே.
உன் கண்போல் பூக்கவில்லையேயென
பூக்களெல்லாம் கண்ணீர் விடுகின்றன.


காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.

குவளை மலர்கள் காணும் தன்மைப்பெற்றுக் கொண்டால், “இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்”

உன் கூந்தலேறிய மகிழ்ச்சியில்
அநிச்ச மலர் சிரிக்கிறது.
அதன் எடைதாங்காமல்
உன் மெல்லிடையோ அழுகிறது.


அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினாள்; அவற்றால் நொந்து வருந்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

நட்சத்திரமெல்லாம் மின்னுகிறதா?
அடிப்போடி…
நிலவெது? உன் முகமெது? எனத் தெரியாமல்
மலங்க மலங்க விழிக்கிறது!



மதியு மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்.

விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

உன் முகம் நிலா என்கிறேன்.
கோபிக்கிறாய்.
சரி சரி பௌர்ணமிதான்!



அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளதுபோல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ? இல்லையே!

உன் முகம்போல் ஒளியில்லாததால்
என்னிடமிருந்து தப்பித்தது…
நிலவு!

மாதர் முகம்போலொளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல் ஒளி வீச உன்னால் முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

உன் போல ஒளிவீச
நிலவுக்கும் ஆசையாம்.
என்ன ரகசியமென சொல்லிக்கொடு.


மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்
பலர்காணத் தோன்றன் மதி.

திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

பூக்களும் மயிலிறகும் கூட
உன் பாதத்துக்கு வலிக்கிறதா?
இனி தென்றலில் நட!


அனிச்சமு மன்னத்தின் றூவியும் மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.

அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவை மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை

காதல் பூக்கும் மாதம் - 30

3. புணர்ச்சி மகிழ்தல்


அழகு.இசை.சுவை.மணம்.ஸ்பரிசம்.
இப்படி நீ தரும் ஐம்புல
இன்பங்களுக்கும்
மேலாகத் தர என்னிடம் இருக்கிறது
காதல்!


கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டோடி கண்ணே யுள.

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.


காதலில் விழவும் வைக்கிறாய்.
காதலோடு எழவும் வைக்கிறாய்.
நீ நோயா? மருந்தா?


பிணிக்கு மருந்து பிறம னணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன. ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

உன் தோள் சாய்ந்திருந்த தனிமைப் பொழுதில்
“இப்படியே சொர்க்கம் போய் விடலாமா?” என்கிறாய்.
இப்போது மட்டும் எங்கிருக்கிறோம்?


தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு.

தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில்போல் இனிமை உடையதோ?

விலகினால் சுடும்,
நெருங்கினால் குளிரும் ஒரு தீ…
இவள் ஒருத்தி தான்!


நீங்கிற் றெறூஉங் குறுகுங்ஆற் றண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றா ளிவள்.

நீங்கினால் சுடுகின்றது. அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது. இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்?

ஒரு தேவதையென்னைக் காதலிப்பாளென
சிறுவயதில் நானும் நினைத்ததுண்டு!
இன்றோ என் தோள்சாய்ந்தபடி
என்னோடு நடக்கிறாய் என் காதலியாக…
இதுதான் நினைத்தது ‘நடப்பது’என்பதா?


வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோள்தாழ் கதுப்பினா டோள்.

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைந்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

தழுவும்போதெல்லாம்
என்னுள் நழுவுகிறாய்.
தோல் போர்த்திய அமிழ்தை
தோள் என்று நம்ப சொல்கிறாயா?


உறுதோறு றுயிர் தளிப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தி னியன்றன தோள்.

பொருந்தும்போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாத் தீண்டுதலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அணைத்துச் சேரும்போது,
“பகுத்துண்ணும் இன்பம் இதுவா?” என்றேன்.
இல்லையெனச் சொல்லி,
அணைத்துச் சேர்த்தாய் நம் உதடுகளை!

தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு.

அழகிய மாமை நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுத்து உண்டாற் போன்றது.

இறுக்கி அணைக்கிறாய்.
மூச்சு வாங்குகிறது…
இடையில் அகப்பட்ட காற்று!


வீழு மிருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும், தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவர்க்கும் இனிமை உடையதாகும்.

நமக்குள்ளான சண்டையில்
யார் முதலில் விட்டுக் கொடுப்பதென
ஆரம்பிக்கிறது அடுத்த சண்டை…

ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதல். ஊடலை உணர்ந்து விடுதல். அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப்பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

அணைத்துப் படித்தால்
எல்லாப் பக்கமும்
காதல் வழிகிற
கவிதைப் புத்தகம் நீ!


அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு.

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல். நூற்பொருள்களை அறிய அறிய அறியாமை கண்டாற் போன்றது.


நீ தூங்க அனிச்சப்பூக்களைத் தூவினேன்,
கதறுகின்றனப் பூக்கள்…
உனக்கு வலிக்குமென!

காதல் பூக்கும் மாதம் - 20

2. குறிப்பறிதல்

ஒரு பார்வையில் சாம்பலாக்குகிறாய்…
மறு பார்வையிலோ
ஃபீனிக்ஸ் பறவையாய் மாற்றுகிறாய்!



இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

என் காதல் கடலென்றிருந்தேன்…
அரைக்கண்ணில் பார்க்கும்
உன் கள்ளப் பார்வையில்
என் முழுக்காதலும் ஒரு துளியானது!

கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற்
செம்பாக மன்று பெரிது.

கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று; அதைவிடப் பெரிய பகுதியாகும்.

உன் பார்வையில்
மழையாய்ப் பொழிகிறதென் ஆண்மை!
என் பார்வையில்அருவியாய்
வழிகிறது உன் வெட்கம்!
மழையிலும் அருவியிலும்
நனைகிறது நம் காதல்!


நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர்.

என்னை நோக்கினாள்; யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தாள்; அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

உன்னைப் பார்க்கிறேன்…
மண்ணைப் பார்க்கிறாய்!
விண்ணைப் பார்க்கிறேன்…
என்னைப் பார்க்கிறாய்!
என்னுள் சேர்த்தப் புன்னகையோ
உன்னுள் பூக்கிறது வெட்கத்தோடு!


யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற்
றானோக்கி மெல்ல நகும்.

யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

அரைக்கண்ணில் பார்த்தே
முழு உயிரையும் குடிக்கிறாய்.
இன்னும் நேராய்ப் பார்த்தால்?


குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

என்னை நேராக குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.

காதலைத் தவிர
எல்லாவற்றையும் பேசுகிறாய்.
ஆனால் காதலோடு!


உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப் படும்

புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.


நீ ஒளித்து ஒளித்து வைத்தாலும்
உன் பொய்க் கோபத்திலும் செல்ல முறைப்பிலும்
மெல்ல மெல்ல வெளிப்படுகிறது
உன் காதல்.


செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும்
உறாஅர்போன் னூற்றார் குறிப்பு.

பகைகொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்போல் பார்வையும் புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

நீ சிரிப்பது அழகு.
என்னைப் பார்த்து சிரிப்பது பேரழகு.
நான் பார்க்கும்போது சிரிப்பதின் அழகை
வருணிக்க ஒரு வார்த்தைக் கொடு.


அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யா னோக்காப்
பசையினள் பைய நகும்.

யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

பார்த்தும் பார்க்காமல் என் பார்வை,
பார்க்காததைப் போல பார்க்கும் உன் ்பார்வை,
காதல் நடத்துகிறது கண்ணாமூச்சி!

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.

புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.

பார்வைகளே பாசையானபின்
வார்த்தைகள் வந்தும்
என்ன செய்யும்?


கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில.

கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.