சனி, 5 பிப்ரவரி, 2011

சுகமாய்


காதல் சுகமானது
உன் பெயர் சொல்லி
அழைக்கும் போது....
கண்கள் மூடி
தவிக்கும் போது தான்
தெரிகிறது
காதல் தவறில்லை என்று....

வேர்கள் இல்லாத
தாவரங்களா?...
காம வேர்கள் இல்லாத
நட்பும் இல்லை
காதலும் இல்லை...
வேர்கள் வெளியில்
தெரிந்தால்
இறந்து போகும்
என்றே
புதைந்து கிடக்கின்றன
நம்முள்.....

வேர்களை
ஒளித்து
மறைத்து
காதல் செய்கிறேன்
சுகமாய்
என்னுள்..