காதல் வலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் வலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

என் வாழ்க்கை


என் வாழ்க்கை
விதியை
நானே எழுத நினைப்பதால் தான்
அடிக்கடி தோற்றுபோய் அழுகிறேன்........
எனக்காய் ஒரு வரம் வாங்கி கொடு ....
என் கண்மணியே .....
கண்ணீர் இல்லாத
ஒரு நாள் வேண்டும்...
என் ஆன்மாவிற்கு
அழுவதற்கு கூட இனி
கண்ணீர் இல்லை....
வலிகளால் வாழ்க்கை
எனக்கு மட்டும் ஏனடி.....

சிக்கிரம் சொல்.....

நான் உன்னை
மறுத்த பின்புமா
காதல் செய்கிறாய்? என்று
ஆச்சரியமாக என்னை கேட்டாய்.. .
நீ என்னை வெறுத்த போதே உன்னை
காதல் செய்தேனடி...
இன்று
நீயும் என்னை காதல் செய்கிறாய் ....
என்னிடம் சொல்லாவிட்டாலும்
உன்னிடமாவது சொல்....
உனக்கு தான்
எதுவும் தாமதமாய் தான் புரியும் ?.....
சிக்கிரம் சொல்.....
உன்னிடம்
சிலநிமிடமாவது
நான்
வாழ்வது சுகம்....

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

என் காதலையும் சேர்த்து....

என்னை
புரிந்து கொள்ளாத
உன் மேல்
எனக்கு தீராத கோபம்....
உன்னை நிறையவே திட்டி
கடிதம் எழுதி விட்டேன் ...
நீ வருத்த படுவாய் என்று
பத்திரமாய்
மறைத்து விட்டேன்
மவுனமாய்
என் காதலையும் சேர்த்து....

காரணம் கூட

உன் நினைவுகளை
கவிதை பூக்களாய்
மாற்றி

உன்னிடம்
ஒப்டைக்க
நெடுநாட்களாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...

நீ என்னை
மறந்து போனதற்கான
காரணம் கூட
அறியாமல்....

வலி அதிகம் என்பது....

ஒரு துளி
கண்ணீரில்
என்னை
தோற்க்கடித்தவளே...

ஏமாற்றம்
உன்னை தீண்டும் போதே தெரியும்...
ஏமாந்து போனவர்களை விட
ஏமாற்றியவர்களுக்கே
வலி அதிகம் என்பது....

ஏமாந்த

நான்
காதலித்து
ஏமாந்த
அந்த நாட்களை
யாரிடமும்
சொல்லி அழ கூட முடியவில்லை...

ஆம்...
அந்த கொச்சையான
காதலின் வலி
எனக்கு மட்டுமே தெரியும்....