கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 பிப்ரவரி, 2011

அழகு தேவதை ..!!!!



அழகின் பதுமையே !
உறவின் புதுமையே !

உனை
சிலையென செதுக்கியவன் - உன்
அழகைக்கண்டு - கற்களாய்
சிதறிபோனான்!

உனை
ஓவியமென தீட்டியவன் -உன்
வண்ணம் கண்டு -மாயமாய்
கரைந்துபோனான் !

உனை வர்ணிக்க வார்த்தைகள்
தேடினேன் - இலக்கணத்தில் !
அதில் வார்த்தைகள் இல்லையென்றாலும்!
தலைக்கணத்தோடு கூறுகிறேன்
இவ்வுலகில் நீ மட்டுமே அழகு
என்று !

உனை பார்த்த கணமே
கண்ணுள் நுழைந்தாய் !
இதயத்தில் கலந்தாய் !

உனை கண்ட சந்தோஷத்தில்
என் குருதி அங்குமிங்குமாய்
பீறிட்டு ஓடியது !

என்னுள்ளே சுருதி மெல்லிணமாய்
இசையிட்டு பாடியது !

கோலி விழி கொண்டு - எனை
கோலமிட்டு செல்கிறாய் !

பார்வையாலே பேசிக்கொண்டு
பேச்சு போட்டியில்
எனை, பேசாமலே வெல்கிறாய் !

விழி கொண்டு - எனக்கு
வழி தருவாய் !

புன்னகைத்து - எனக்கு
விடை தருவாய் !

அன்று அவையிலே
தேவியின் கூந்தல்
செயற்கை மணமென்றான்
நக்கீரன் !

உனை கண்டிருந்தால்
தேவியின் கூந்தல்
இயற்கை மணமென்றிருப்பான்!
அவையிலே அவன் வென்றிருப்பான் !

அன்று சொன்னதும் - உண்மைதான் !
இன்று சொல்வதும் - உண்மைதான் !

உன்
இதழோரம் - சிவப்பு !
இடையோரம் -மறைப்பு !
இருந்தாலும் -என் மனம்
உனை அள்ளதுடிக்கிறது
வாழ்வில் வெல்லதுடிக்கிறது

திங்கள், 15 நவம்பர், 2010

என் நாட்குறிப்பில





என்றோ நீ
என் கைக்கெட்டாத தூரத்தில்
கார்மேகத்துள் புதைந்து விட்டாய்!

கருகிய நெஞ்சத்தில்
விரக்தி மணம்
வீசும் போதெல்லாம்
உன் முகமே
என் மன வானில் மலர…

என் நெஞ்சமெங்கும்
உன் நினைவுகளின் விம்பங்கள்!

என் நாட் குறிப்பெங்கும்
உன் வார்த்தைப் புலம்பல்களே!

படகுகள்


வானமெங்கும் கானம் பாடி
என் வண்ணச் சிறகை விரித்து
வான் வெளியே வலம் வரும்
ஒரு வசந்த கால
பறவையல்ல நான்!

பிறக்கும் போதே
பாசம்…
நேசம்… என்னும்
வேர்களும் விழுதுகளும்
அறுக்கப்பட்டு…

பாவச் சிலுவைகளை
நெஞ்சில் சுமந்தபடி
பாரிலே பிறந்த பறவை நான்!

ஓ…!
இந்த வேசம்
நிறைந்த உலகிலே
பாசம் என்னும்
நேசம் தேடி…

இதயத்தில்
பாரம் சுமந்தபடி
பறக்கும்
பாலைவனப் பறவை நான்!

ம்…!
உன் வீட்டு
வாசலைக் கூட
நான் அடிக்கடி
கடந்து செல்கின்றேன்!

அங்கே…
கலைந்திருக்கும்
கோலங்கள் கண்டு
கண்ணீர் சிந்தியும்
சென்றிருக்கின்றேன்!
இழப்புகள் என்பது
உனக்கும் எனக்கும்
வெவ்வேறாக இருக்கலாம்!

ஆனால்
வேதனை சுமந்து
வெந்து துடித்து
ஏக்கத்தில் தவித்து…

இங்கே…
நாளும் ஒரே படகில்
பயணம் செய்பவரென்பது
முற்றிலும் உண்மைதான்!

ம்…!
இனி
இரு வேறாக
தனித்தனி படகில்தான்
போக வேண்டும் என்றாலும் போவோம்!

எப்படியோ …
எப்போதோ …
ஒரு நிமிடம் முடிந்தால்
எங்கேனும் ஒரு கரையில்

நினைப்போம்…!
நிற்போம்…!
நிதானிப்போம்…!

புதன், 10 நவம்பர், 2010

அது ஒரு அழகிய

என் நெஞ்சில்
உன் முகம்
அழகிய சிற்பமாய்!

ஓ…!
எந்த உளி கொண்டு
இத்தனை அழகாய்
செதுக்கி விட்டு…

எனை நிர்க்கதியாய்
தவிக்கவிட்டுச் சென்றாய்…?

ம்…!
என் உணர்வுகளை
எங்கோ தொலைத்து விட்டு
உன் நினைவுகள் இன்றி
வாழவேண்டும் என்றுதான்
தினமும் முயற்சிக்கிறேன்.

ஆனாலும்
ஒவ்வொரு பொழுதும்
அது தோல்வியிலேயே
முடிந்து போகிறது!

நீ என்னை விட்டு
விலகியிருக்கும் துக்கம்
தினமும் எனை தூக்கிலிட…

எப்போதும்
என் யோசனைகள்
உன்னைச் சுற்றியே
வட்டமிட வட்டமிட…

துரத்தும் உன் நினைவுகள்
என் விழிகளின்
தூக்கத்தை தொலைத்து விட…

உருண்டு…
பிரண்டு…
உறக்கத்தை தேடுகின்றேன்!

அப்போது…
தொலைபேசியின் சிணுங்கல்!

“ஹலோ”… என்றேன்!

“அன்பே!… நலமா”… என்றாய்!

ஓ!… அது நீதான்!

“ம்ம்… நலம்”… என்றேன்!

உன் கனிவான பேச்சுக்கள்
என் காதுகளை நிறைக்கிறது!

இறுதியில்…
“என் உயிர் உன் வசம்”… என்றாய்!

உன் வார்த்தையின்
எதிர்பாராத திருப்பத்தை
என்னால்
நம்பவே முடியவில்லை!

இதை
நீயா சொன்னாய்…?

சொற்கள் தடக்கி விழ
தட்டுத் தடுமாறி…
விக்கித்து…

இடறி விழுந்து…
கண் விழித்து…
எழுந்து பார்க்கின்றேன்!

ஓ…!
அது ஒரு அழகிய
அதிகாலைக் கனவு!