நகைச்சுவை

கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?

"கோழியினால்தான் முட்டை வந்தது"

"எப்படி?"

"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆடர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது.

இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை


------------------------------------------------------------------------------------------------------]

ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார்,

'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயே தான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..

சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார்.



தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார்,

'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.


------------------------------------------------------------------------------------------------------ பையன்: அம்மா ஸ்கூலில் இன்னிக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட


செய்தி நடந்துச்சம்மா.


அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.


பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எரிஞ்சு போச்சம்மா


அம்மா: கெட்ட செய்தி?


பையன்: வாத்தியாருங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க!!!!!


------------------------------------------------------------------------------------------------------


நீதிபதி: பத்தாயிரம் அல்லது ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு?


குற்றவாளி: ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.


------------------------------------------------------------------------------------------------------

(ஒருவர் மஞ்சப்பை வைத்துக் கொண்டு LIC க்கு முன்னால் நிற்கிறார். ஒரு சென்னை லோக்கல் ரவுடி அவரிடம்)


ரவுடி: இங்க என்ன பண்ணிட்டு இருக்கிற


ஒருவர்: எவ்வளவு பெரிய உயரமான கட்டிடம் பாத்துட்டு இருக்கேன்.


ரவுடி: அப்படியெல்லாம் சும்மா பாக்க கூடாது. நீ எத்தனை மாடி வரை பாத்தியோ அதுக்கு எனக்கு பணம் தரனும். ஒரு மாடிக்கு பத்து ரூபாய் குடு.


ஒருவர் : நான் 4 வது மாடி வரைக்கும் தான் பாத்தேன் இந்தா பிடி (40 ரூபாய் கொடுக்கிறார்)


ஒரு பொது ஜனம்: என்னங்க அந்த ரவுடி ஏமாத்தி பணம் வாங்கிட்டான் உங்களிடம்


ஒருவர்: அவன் எங்க ஏமாந்தான் நான்தான் ஏமாத்திட்டேன். நான் பாத்தது ஏழாவது மாடி அவனிடம் 4 வது மாடின்னு சொல்லி ஏமாத்தி 40 ருவாதானே குடுத்தேன்

------------------------------------------------------------------------------------------------------


நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'


குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'

------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர்: "டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே?"

ராமு: "அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"


------------------------------------------------------------------------------------------------------


மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்


அப்பா: ஓன்னுமில்லை


மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.


அப்பா:...............

------------------------------------------------------------------------------------------------------



பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேய்யக் கூடாது.....


போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.


பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போறத அந்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமாவா போயிடும்!!!!!

------------------------------------------------------------------------------------------------------


நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்


டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்


நோயாளி: நான் நடக்கலாமா


டாக்டர்:நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க


நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.


டாக்டர்: தாராளமா


நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.


டாக்டர்: ம்..ஓட்டலாமே...


நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.


டாக்டர்: ......????????
------------------------------------------------------------------------------------------------------

இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.


சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்

------------------------------------------------------------------------------------------------------


நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது


சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்
------------------------------------------------------------------------------------------------------

நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"


"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?


------------------------------------------------------------------------------------------------------

எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?


ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.

------------------------------------------------------------------------------------------------------


உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!


ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!

------------------------------------------------------------------------------------------------------


ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!


எப்படி?


என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்

------------------------------------------------------------------------------------------------------


ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.


பையன் என்ன பண்றான்?


டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்

------------------------------------------------------------------------------------------------------
எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...


அடையாளம் சொல்லுங்க...


அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!


------------------------------------------------------------------------------------------------------



நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !


நபர் : ஏன்?


நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

------------------------------------------------------------------------------------------------------

என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க.


அப்படியா... என்ன பண்ணினாங்க?


எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்

------------------------------------------------------------------------------------------------------

கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?


ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?


கோபால் : நான் home work செய்யலை சார்

------------------------------------------------------------------------------------------------------


நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!


டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?


நோயாளி: விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்!


------------------------------------------------------------------------------------------------------